September 8, 2026
Breaking News
ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம்

Tag: Sri Lanka Prison

சிறை நெரிசலுக்கு தீர்வு தேடும் அரசு மின்னணு கண்காணிப்புடன் வீட்டு காவல் சட்டம் பரிசீலனை

Sri Lanka House Arrest, இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிமாண்ட் கைதிகளை மின்னணு கண்காணிப்பு (Electronic Monitoring) வசதியுடன் வீட்டு காவலில் (House Arrest) வைக்கும் புதிய சட்டத்தை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது சுமார் 10,000 முதல் 11,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் திறன் கொண்ட சிறைச்சாலைகளில் 40,000 க்கும் அதிகமான கைதிகள் […]

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்த 10 சிறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 மில்லியன் இழப்பீடு வழங்க நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் அதனை சமர்ப்பிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்கள் 55 வயதை எட்டும் வரை மாதாந்திர சம்பளத்தை வழங்கவும் அதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. […]

நீர்கொழும்பு சிறை உயிரிழப்புகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் மரணங்கள் தொடர்பாக சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல்களும் உயிரிழப்புகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றாலும் காவலில் இருந்த கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் மரணங்கள் குறித்தும் சம அளவில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலைகளில் […]

நீர்கொழும்பு சிறை பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி மொத்தம் 166 பெண் கைதிகள் வாரியபொல, போகம்பரை அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு […]

நீர்கொழும்பு சிறை வன்முறை கைதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான வன்முறை மோதல் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதலின்போது சிறை அதிகாரிகளைத் தாக்க கைதிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல கூர்மையான ஆயுதங்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகள் சிறை வளாகத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கைதிகள் சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்து அங்கிருந்த தேங்காய்களையும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் […]

நீர்கொழும்பு சிறை வன்முறை விரிவான விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் மோதல்களுக்கு வழிவகுத்த காரணங்கள் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உயிரிழப்புகள், காயங்கள், சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆராயப்படவுள்ளன. மேலும், நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரு கைதிகளின் மரணங்களும் விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது […]

நீர்கொழும்பு சிறை வன்முறை பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து பேர் கொண்ட தடயவியல் மருத்துவக் குழு 24 உடல்களுக்கு மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையின் படி சிறை அதிகாரிகள் தலையில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல்களால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மரணங்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டாலும் 9 பேர் கொடூரமான தாக்குதல்களாலும் […]

நாடு முழுவதும் சிறைகளில் பதற்றம் வெடிக்கும் அபாயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கொடூர வன்முறைச் சம்பவம் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் அபாயத்தை வெளிப்படுத்துவதாக கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (PRC) அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சிறைச்சாலைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசல் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை மற்றும் போதிய நிர்வாகக் கட்டுப்பாடு இல்லாமையே இவ்வாறான வன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகக் குறிப்பிட்டார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் 600 முதல் 650 […]

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் பிரதான சூத்திரதாரி இவரா?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடங்கியதாகக் கூறப்படும் கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதி பாதுகாப்பு காரணங்களால் பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் கட்டுவெல்லகம சுரேஷ் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல் கொள்ளை, போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. மேலும் 2016 ஆம் ஆண்டு நாரம்மலை பகுதியில் உள்ள கோவிலொன்றில் துறவி மற்றும் அவரது […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2 பேர் உயிரிழப்பு, 35 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) மதிய வேளையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் ஆண் கைதிகள் குழுவும் கூரையில் ஏறி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு […]