Tag: Sri Lanka Railways
யாழ் தொடருந்து நிறுத்தம், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு தொடருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினம் என்பதால் குறித்த தொடருந்தின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த யாழ்தேவி விரைவு தொடருந்தில் காங்கேசன்துறை நோக்கிச் […]
நுவரெலியா மாவட்டத்தின் அம்பேவெல பகுதியில் இன்று (19) காலை நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து தொடருந்து ஊழியர்களும் அதிகாரிகளும் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் காயமடைந்த சுற்றுலாப் பயணி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து மலையக தொடருந்து பாதையில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் […]
எதிர்வரும் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூலக் கேள்வி நேரத்தில் இதனை அறிவித்த அவர் நல்லூர், மடு மற்றும் தலதா மாளிகை போன்ற புனித தலங்கள் மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் தரிசிக்க வேண்டிய இடங்களாக இருப்பதாக குறிப்பிட்டார். வடக்கு தொடருந்துப் பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால் தற்போது தொடருந்துகள் […]
இலங்கையின் ரயில்வே வரலாற்றில் அரிய நிகழ்வாக பல தசாப்தங்கள் பழமையான வரலாற்றுச் ரயில் என்ஜின் ஒன்று கண்டி மற்றும் பேராதனை இடையே ரயில் பாதையைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த அபூர்வ நடவடிக்கை ரயில் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.பொதுவாக ரயில் என்ஜின்கள் தண்டவாளங்களிலேயே நகர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை சிறப்பு கனரக போக்குவரத்து வாகனத்தின் உதவியுடன் சாலை வழியாக என்ஜின் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக பல்வேறு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் போக்குவரத்து […]
தித்வா புயல் காரணமாக சேதமடைந்த தலைமன்னார் புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்பே நிறைவடைந்திருந்தாலும் இதுவரை பயணிகள் புகையிரத சேவையை மீள ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த ஆண்டு தித்வா புயலால் தலைமன்னார் புகையிரத பாதையின் சில பகுதிகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து சேவை இடைநிறுத்தப்பட்டதாக கூறினார். தற்போது […]
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் ரயில்வே உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரயில் சேவைகளை அதிகரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. ரயில் இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக முழுமையான சேவைகளை மீள ஆரம்பிப்பதில் சிரமம் இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்ததுடன்,புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய […]
இலங்கை ரயில்வே இணையதளம் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதல் காரணமாக ரயில் அட்டவணை (train schedule) அமைப்பு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (14) பதிவான இந்த சம்பவத்தில் இணையதளத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படுவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் அட்டவணை பகுதி உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகும் பயணிகள் எந்த வித இடையூறும் இல்லாமல் பிற தகவல் சேவைகளை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த […]
ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்த நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து நாடளாவிய ரயில் சேவைகள் வழக்கமான நேர அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில தொழிற்சங்க கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தினசரி ரயிலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் மத்தியில் அச்சம் நிலவியது. குறிப்பாக அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற […]
வனவாசல உப தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கு தடம் மாற்றும் அமைப்பின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டிருந்தமையே காரணம் என தொடருந்து திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகத்துக்கும் பிரதான தொடருந்து பாதைக்கும் இடையில் தொடருந்துகளை தடம் மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் இணைப்பு கம்பிகள் யாரோ ஒருவர் அல்லது ஒரு குழுவினரால் திட்டமிட்டோ அல்லது திருடும் நோக்கிலோ கழற்றப்பட்டிருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் […]