September 11, 2026
Breaking News
ஸ்லாவியா பிராகை வீழ்த்தி பரபரப்பான வெற்றி பெற்ற லென்ஸ் மக்ரோனின் பொருளாதார செயல்பாடு மோசம் என 66% பிரெஞ்சு மக்கள் கருத்து மைய வேட்பாளர் இல்லையெனில் மெலன்சோன் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு: கருத்துக்கணிப்பு படகுப் போட்டியின் விறுவிறுப்பில் கவரும் சூரியின் ‘மண்டாடி’ உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு ஸ்லாவியா பிராகை வீழ்த்தி பரபரப்பான வெற்றி பெற்ற லென்ஸ் மக்ரோனின் பொருளாதார செயல்பாடு மோசம் என 66% பிரெஞ்சு மக்கள் கருத்து மைய வேட்பாளர் இல்லையெனில் மெலன்சோன் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு: கருத்துக்கணிப்பு படகுப் போட்டியின் விறுவிறுப்பில் கவரும் சூரியின் ‘மண்டாடி’ உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு

Tag: Tamil News

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2027 வாக்குப்பதிவு தேதிகள் அறிவிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2027 நடைபெறும் தேதிகளை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. 2026 ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தேர்தல் தேதிகள் உறுதி செய்யப்பட்டதாக Service-Public தெரிவித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு 2027 ஏப்ரல் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். எந்த வேட்பாளரும் தேவையான பெரும்பான்மை பெறாத பட்சத்தில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு 2027 மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். ஆனால் Guadeloupe Martinique Guyane […]

வேலை இழப்பு உதவித்தொகை 3 மாதம் வரை நிறுத்தம்

Europe News, பிரான்சில் சமூக மற்றும் வரி மோசடிகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் 2026 ஜூன் 25 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் கீழ் வேலை இழப்பு உதவித்தொகை (Allocation chômage / ARE) பெறுபவரிடம் மோசடி செய்ததற்கான வலுவான ஆரம்ப ஆதாரங்கள் இருப்பதாக France Travail அமைப்பு கருதினால் அவருக்கான உதவித்தொகையை அதிகபட்சம் 3 மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்த முடியும். உதவித்தொகை நிறுத்தப்படுவதற்கு முன் அல்லது அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபருக்கு தனது விளக்கத்தையும் […]

பிரான்சில் 2009க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை தடை?

பிரான்ஸ் சிகரெட் விற்பனை தடை, பிரான்சின் அரசு சுகாதார காப்பீட்டு அமைப்பான Assurance Maladie 2009 ஜனவரி 1 முதல் பிறந்தவர்களுக்கு எதிர்காலத்தில் சிகரெட் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும் புதிய யோசனையை முன்வைத்துள்ளது. இதன் நோக்கம், புகைப்பிடிக்காத ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதாகும். இந்த முன்மொழிவு, பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த “Tobacco-Free Generation” மாதிரியைப் பின்பற்றுகிறது. இதன்படி, 2009க்கு பின் பிறந்தவர்கள் எப்போதும் சட்டபூர்வமாக சிகரெட் வாங்க முடியாத வகையில் சட்டம் உருவாக்கப்படலாம். இந்த யோசனை […]

பிரான்சில் 90 நாள் விதியை மீறினால் என்ன தண்டனை?

பிரான்சில் 90 நாள் விதி, பிரான்ஸ் மற்றும் முழு Schengen பகுதியில் விசா இல்லாமல் அல்லது 90/180 நாள் விதியின் கீழ் தங்கும் வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட 90 நாட்களை மீறி தங்கினால் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று புதிய விளக்கம் வெளியாகியுள்ளது. பிரான்சில் 90 நாள் விதி. சட்டத்தின் படி 90/180 நாள் விதியின் கீழ் தங்கும் பிரித்தானியா அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கினால் €198 […]

இங்கிலாந்தில் போலி அடையாளத்தில் வாழ்ந்த முக்கிய மனிதக் கடத்தல்காரர் அம்பலம்

UK Tamil News, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாக குடியேறிகளை கடத்தியதாக தண்டனை பெற்ற முக்கிய மனிதக் கடத்தல்காரர் ஒருவர் போலி அடையாளத்தை பயன்படுத்தி இங்கிலாந்தில் வாழ்ந்து வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த ட்வானா ஜமால் (Twana Jamal) என்பவர் பிரான்சில் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் வேறு பெயரில் இங்கிலாந்திற்குள் நுழைந்து அங்கு புகலிடம் கோரி வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஸ்பெயின் குடியிருப்பு சட்டப்பூர்வ திட்டம், 10 லட்சத்தை கடந்த விண்ணப்பங்கள்

Spain News, ஸ்பெயின் அரசு ஆவணங்களின்றி (Undocumented) வாழ்ந்து வந்த வெளிநாட்டவர்களுக்காக அறிமுகப்படுத்திய விசேட குடியிருப்பு சட்டப்பூர்வப்படுத்தல் (Regularization) திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு காலம் ஜூன் 30, 2026 அன்று நிறைவடைந்துள்ளது. அரசு ஆரம்பத்தில் சுமார் 5 இலட்சம் பேருக்கு இந்தத் திட்டம் பயன்பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இறுதியில் 10 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்களின்படி மொத்த விண்ணப்பங்கள் 11.7 இலட்சத்தைத் தாண்டியுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் […]

சட்டவிரோத உப்பள நிர்மாணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் உப்பள நிர்மாணப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விளக்கம் கோரியுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஜூன் 29ஆம் திகதி மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விசேட […]

பணவீக்கம் இருந்தும் தாயக குடும்பங்களை கைவிடாத பிரான்சிலுள்ள புலம்பெயர்ந்தோர்

பிரான்சில் புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புதல், பிரான்சில் வாழும் பல புலம்பெயர்ந்தோர் நாட்டில் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையிலும் தங்களது குடும்பங்களை ஆதரிப்பதற்காக தாயகங்களுக்கு பணம் அனுப்புவதை நிறுத்தவில்லை என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலர் தங்களது தனிப்பட்ட செலவுகளை குறைத்து பொழுதுபோக்கு ஆடை வெளி உணவு போன்றவற்றில் சிக்கனமாக இருந்து பெற்றோர் மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு மாதாந்திரமாக பணம் அனுப்புவதாக கூறப்படுகிறது. எனினும் பணவீக்கம் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக […]

பிரான்சில் (கொக்கி குமார்) சுஜித் மரணம் கொலையா ?

கொக்கி குமார் மரணம், பிரான்சில் தமிழ்த் தேசியப் பற்றாளராகவும் சமூக ஊடகங்களில் கொக்கி குமார் என அறியப்பட்ட அழகேந்திரராசா சுஜித் அவர்களின் மரணம் தொடர்பாக பிரான்ஸ் காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் இது இயற்கை மரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சுஜித் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட கொலை மற்றும் தற்கொலை உள்ளிட்ட சந்தேகங்களுக்கு இடமில்லை என்றும் குற்றச்செயல் […]

பின்லாந்தில் ஈரானியர்களின் அகதி அந்தஸ்து கோரிக்கைகள் மீண்டும் பரிசீலனைக்கு

பின்லாந்து ஈரானியர்களின் புகலிடக் கோரிக்கை, பின்லாந்து குடிவரவு சேவை (Migri) ஈரானியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சர்வதேச பாதுகாப்பு (புகலிட) விண்ணப்பங்களின் பரிசீலனையை 2026 ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஈரானின் பாதுகாப்பு நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களால் 2026 பிப்ரவரி மாதம் சில விண்ணப்பங்களின் முடிவெடுக்கும் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காலத்தில் பாதுகாப்பு நிலைமை குறித்த மேலதிக தகவல்கள் தேவைப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது ஈரானின் பாதுகாப்பு மனித உரிமைகள் மற்றும் அரசியல் சூழல் தொடர்பான […]