முக்கிய நடவடிக்கைகள்
அங்கோலா: 25 கிரிப்டோகரன்சி மைனிங் மையங்கள் ஒழிக்கப்பட்டன. USD 37 மில்லியன் மதிப்பிலான கணினி மற்றும் மின்சார உபகரணங்கள் பறிமுதல்.
சாம்பியா: 65,000 பேரை ஏமாற்றி USD 300 மில்லியன் பணத்தை மோசடி செய்த ஆன்லைன் முதலீட்டு மோசடி கும்பல் கலைக்கப்பட்டது; 15 பேர் கைது.
சாம்பியா (லுசாகா): போலி பாஸ்போர்டுகள் 372 பறிமுதல்; மனிதக் கடத்தல் வலையமைப்பு சிதைக்கப்பட்டது.
கோட் டி’வாயர்: ஜெர்மனியில் இருந்து இயங்கிய பாரம்பரிய வாரிசுரிமை (Inheritance scam) மோசடி கும்பல் ஒழிக்கப்பட்டது USD 1.6 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.
இன்டர்போல் செயலாளர் வால்டெசி உர்குவிசா கூறியதாவது:
“ஒவ்வொரு நடவடிக்கையும் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது. அதிக தகவல் பகிர்வு, திறமையான விசாரணைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடிகிறது.”
இந்த நடவடிக்கை, ஆப்ரிக்காவின் முக்கியமான சைபர் அச்சுறுத்தல்களை குறிவைத்து, உலகளாவிய சைபர் குற்றவாளிகளை தடுக்க எடுத்த மிகப்பெரிய முயற்சியாக கருதப்படுகிறது.































