இன்டர்போல் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற “ஆப்பரேஷன் செரெங்கெட்டி 2.0” நடவடிக்கையில், ஆப்ரிக்கா முழுவதும் 1,209 இணைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் 97.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மீட்கப்பட்டதுடன், 11,432 குற்றவியல் இணையமைப்புகள் களைந்துவிடப்பட்டன. ஜூன் முதல் ஆகஸ்ட் 2025 வரை நீடித்த இந்த ஆபரேஷனில் 18 ஆப்ரிக்க நாடுகளும், இங்கிலாந்தும் பங்கேற்றன.
முக்கிய நடவடிக்கைகள்
அங்கோலா: 25 கிரிப்டோகரன்சி மைனிங் மையங்கள் ஒழிக்கப்பட்டன. USD 37 மில்லியன் மதிப்பிலான கணினி மற்றும் மின்சார உபகரணங்கள் பறிமுதல்.
சாம்பியா: 65,000 பேரை ஏமாற்றி USD 300 மில்லியன் பணத்தை மோசடி செய்த ஆன்லைன் முதலீட்டு மோசடி கும்பல் கலைக்கப்பட்டது; 15 பேர் கைது.
சாம்பியா (லுசாகா): போலி பாஸ்போர்டுகள் 372 பறிமுதல்; மனிதக் கடத்தல் வலையமைப்பு சிதைக்கப்பட்டது.
கோட் டி’வாயர்: ஜெர்மனியில் இருந்து இயங்கிய பாரம்பரிய வாரிசுரிமை (Inheritance scam) மோசடி கும்பல் ஒழிக்கப்பட்டது USD 1.6 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.
இன்டர்போல் செயலாளர் வால்டெசி உர்குவிசா கூறியதாவது:
“ஒவ்வொரு நடவடிக்கையும் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது. அதிக தகவல் பகிர்வு, திறமையான விசாரணைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடிகிறது.”
இந்த நடவடிக்கை, ஆப்ரிக்காவின் முக்கியமான சைபர் அச்சுறுத்தல்களை குறிவைத்து, உலகளாவிய சைபர் குற்றவாளிகளை தடுக்க எடுத்த மிகப்பெரிய முயற்சியாக கருதப்படுகிறது.





Leave a Reply