சுவிஸ் நாட்டில் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுடன் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு தடை, இது தொடர்பான புதிய மசோதா ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது

மேற்குலக நாடுகளில் புதிய புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டு வரும் வரிசையில் சுவிஸ் நாட்டில் இந்தச் சட்டமானது பலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 93 பேரும் எதிராக 81 நபர்களும் மேலும் 15 பேர் இதிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

நோக்கமும் எதிர்வினை

மற்றைய நாடுகளின் அரசு அதிகாரிகளோடு அல்லது அமைப்புகளோடு சுவிசில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஆங்கில மொழியில் பேசுவதை தடை செய்யும் வகையில் இந்த மசோதா முன்வைக்கப்பட்டிருந்தது

வெளிநாட்டு அமைப்புகள் சுவிஸ் நாட்டினது உத்தியோபூர்வ மொழிகளான ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு மற்றும் ரோமானிய மொழிகளை பயன்படுத்த தெரிந்தவர்கள் அதனால் மொழி தொடர்பில் எந்தவித ஒரு பிரச்சனையையும் எதிர்நோக்க நேரிடாது என 93 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி மற்றும் இது போன்ற பல சர்வதேச அமைப்புகளுடன் ஆங்கில மொழியிலேயே தொடர்பாடல் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்கும் போது இவ்வாறான ஒரு மசோதாவுக்கு எதிராக 81 பேரும், இதிலிருந்து எந்த ஒரு முடிவும் அறிவிக்காது மேலும் 15 பேர் விலகியும் இருந்தனர்.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் சுவிஸ் நாட்டு அமைச்சர் ஒருவரின் தவறான ஆங்கில வார்த்தை பிரயோகம் சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாக உலாவியது, இதன் காரணமாகவே எதிர்காலத்தில் சுவிஸ் நாட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் சுவிஸ் நாட்டுக்கு உரித்தான உத்தியோ மொழிகளிலே உரையாட வேண்டும் என இந்த மசோதா கொண்டு வரப்படுவதாகவும் விசனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading