கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கனடா அரசு புதிய மசோதா ஒன்றை முன் வைத்துள்ளது. கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக ஏற்கனவே இறுக்கமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிதாக ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அரசு புதிய மசோதா ஒன்றை முன்வைத்துள்ளது.

மேலும் புலம்பெயர்வோர் தொடர்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு எல்லை பாதுகாப்பில் உள்ள காவல் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புலம்பெயர் தொடர்பான செயல்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் லீனா டயர்ஸ் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தல்கள் தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் சட்ட விரோத முறையில் எல்லைகளை கடக்க முற்படும் புலம்பெயர்வோரை மேலும் கட்டுப்படுத்த முடியும். இதற்கான முழுமையான அதிகாரங்கள் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இதனூடாக கனடாவிற்கு உள்ளே ஒரு வருட காலத்துக்கு மேலதிகமாக தங்கி இருந்த பின்னர் புகலிடத் தஞ்சம் கோரும நபர்களை கண்டறிந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளையும் மும்மூரமாக மேற்கொள்ள முடியும்.

இனிவரும் காலங்களில் புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவிற்குள் நுழைந்து 14 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு இல்லாத தற்போது போன்று ஒரு வருட காலத்துக்கு மேலதிகமாக தங்கி இருந்த பின்னர் புகழிடக்கோரிக்கையை முன் வைப்பவர்கள் மீது இந்த மசோதாவைக் கொண்டு கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து உடனடி நாடு கடத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மறைமுகமாக சுட்டிக்காட்டிஇருந்தார்.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading