இன்று (22) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது இலங்கையில் முன்னாள் தலைவரொருவர் கைது செய்யப்படும் முதலாவது சம்பவமாகும்.

காலை CID அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்துடன் தொடர்புடைய விசாரணையின் ஒரு பகுதியாக இக்கைது இடம்பெற்றுள்ளது. அந்தப் பயணம் நியூயார்க் மற்றும் பின்னர் லண்டனுக்கு சென்றதாகவும், லண்டனில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு தனிப்பட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய பயண செலவினமாக அரசுக்கு ரூ. 16.9 மில்லியன் செலவாகியுள்ளதாக CID தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் எகனாயக்க மற்றும் முன்னாள் தனிச்செயலாளர் சாண்ட்ரா பெரேராவிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading