சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஜூன் 30ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரத்தின் அடிப்படையில், 2025 ஜூலை 01ஆம் திகதி எடுக்கப்பட்ட இலக்கம் 25/1145/801/018 என்ற அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இக்குழு நிறுவப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து கருத்துகள்

இக்குழு, விமான நிலையங்கள் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், மற்றும் பொதுமக்களிடமிருந்தும் முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற விரும்புகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்

ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2025 செப்டெம்பர் 05ஆம் திகதிக்குள் கீழ்க்கண்ட வழிகளில் தங்கள் கோரிக்கைகளை அனுப்ப வேண்டும்:

மேலும், முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தைப் பதிவு செய்வதற்கும் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்