விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஜூன் 30ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரத்தின் அடிப்படையில், 2025 ஜூலை 01ஆம் திகதி எடுக்கப்பட்ட இலக்கம் 25/1145/801/018 என்ற அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இக்குழு நிறுவப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து கருத்துகள்
இக்குழு, விமான நிலையங்கள் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், மற்றும் பொதுமக்களிடமிருந்தும் முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற விரும்புகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்
ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2025 செப்டெம்பர் 05ஆம் திகதிக்குள் கீழ்க்கண்ட வழிகளில் தங்கள் கோரிக்கைகளை அனுப்ப வேண்டும்:
- மின்னஞ்சல்: psicairport@gmail.com
- WhatsApp எண்: 070-3307700
மேலும், முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தைப் பதிவு செய்வதற்கும் குழு கேட்டுக்கொண்டுள்ளது.









Leave a Reply