டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள குஷாக் சாலையின் ஸ்வரூப் நகர் பகுதியில், ஜெய்பால் ராணாவின் வயலுக்கு அருகே கடந்த 13ஆம் தேதி சிறுமியின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததுடன், அதன் சில பகுதிகளை தெருநாய்கள் கடித்து குதறியிருந்தன. ஒரு கை உடலில் இருந்து நாய்களால் கடித்து அகற்றப்பட்டிருந்தது. உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை தீவிரம்
Delhi minor girl murder தொடர்பான பிரேதப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேரடி சாட்சிகள் இல்லாததாலும், குற்றவாளிகளின் அடையாளம் தெரியாததாலும், போலீஸார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
சம்பவ இடம் அருகே நகர்ந்த டெம்போ ஒன்று பதிவுகளில் சிக்கியது. இருள் காரணமாக அதன் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து பல கேமராக்கள் மூலம் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்த போலீஸார், இரவு முழுவதும் தேடி டெம்போவை கண்டுபிடித்து, ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சிறுமியும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், சம்பவத்தின்போது அவர் அவர்களுடன் டெம்போவில் பயணித்ததாகவும் போலீஸார் கூறினர். நான்கு பேரும் மது அருந்திவிட்டு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் தெரிவித்தனர். சிறுமி அடிக்கடி சில நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே சென்று திரும்புவார் என்பதால், அவர் காணவில்லை என குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.































