இலங்கையின் திருத்தப்பட்ட “தனிநபர் முதலீட்டாளர்” பிரிவின் கீழ் முதலாவது குடியிருப்பு விசா நேற்று (அக்டோபர் 1) வழங்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சகம் தெரிவித்ததாவது, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Dr. Prey Drechsel என்பவருக்கே இந்த முதலாவது விசா வழங்கப்பட்டுள்ளது.
2023 நவம்பரில் கசேட் செய்யப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக, குறைந்தது அமெரிக்க டாலர் 100,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் குடியிருப்பு விசாவும், அமெரிக்க டாலர் 200,000 அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் குடியிருப்பு விசாவும் பெற முடியும்.
விண்ணப்பதாரர்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வணிக வங்கியில் Visa Programme Foreign Currency Account (VPFCA) எனப்படும் கணக்கைத் திறந்து, தேவையான நிதியை வைப்பு செய்ய வேண்டும்.
அதிகாரிகள் குறிப்பிட்டதாவது இத்திட்டம் இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நீண்டகால குடியிருப்பு வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டதாகும்.





Leave a Reply