UK விசா தடை – தவறான பயன்பாடு அதிகரித்ததால் அவசர நடவடிக்கை.
இங்கிலாந்து அரசு விசா முறையை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறி 4 நாடுகளுக்கு “அவசர விசா கட்டுப்பாடு” (visa brake) விதித்துள்ளது.
இந்த UK விசா தடை நடவடிக்கையின் கீழ் ஆப்கானிஸ்தான், காமரூன், மியான்மர் மற்றும் சூடான் நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மாணவர் விசாக்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு வழங்கப்படும் வேலை விசாக்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது 2021 முதல் 2025 வரை சட்டபூர்வமாக மாணவர் விசா மூலம் வந்தவர்களில் இருந்து அகதி கோரிக்கைகள் 470% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த 4 நாடுகளைச் சேர்ந்தவர்களில் அதிக அளவில் asylum விண்ணப்பங்கள் செய்யப்பட்டதால் விசா முறையின் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
உள்துறை செயலாளர் ஷபானா மக்மூத் போரிலும் அடக்குமுறையிலும் இருந்து தப்பி வரும் மக்களுக்கு இங்கிலாந்து எப்போதும் பாதுகாப்பளிக்கும் ஆனால் விசா முறையை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042
இந்த நடவடிக்கை இங்கிலாந்தின் குடியேற்ற கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.













Leave a Reply