பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார், பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் மேற்கொண்ட தலையீட்டினால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் இலங்கை அணி தொடர்ச்சியான போட்டிகளுக்காக பாகிஸ்தானில் தங்க முடிவு செய்தது.
செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சில வீரர்கள் நாடு திரும்ப விரும்பிய சூழலில், இலங்கை கிரிக்கெட் குழு நேற்று இரவு சுற்றுப்பயணம் தொடரும் என அறிவித்தது.
பாகிஸ்தான் செனட்டில் பேசிய நக்வி,
“எங்கள் பீல்டு மார்ஷல் அவரே இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் செயலாளரும் தொடர்புகொண்டு முழு பாதுகாப்பையும் உறுதி செய்தார்,” என தெரிவித்தார்.
குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு இலங்கை அணி நாடு திரும்ப முடிவு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும்,
“அவர்களுக்கு பல அச்சங்கள் இருந்தன. ஆனால் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என நாங்கள் புரிய வைத்தோம். இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்கே அவர்களும் தமது அணியுடன் உரையாடி தங்குமாறு உற்சாகப்படுத்தினார்,” என்றார்.
தற்போது பாகிஸ்தான் இராணுவம், ரேஞ்சர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் பொலிஸார் இணைந்து இலங்கை அணிக்கு அரசு விருந்தினர் பாதுகாப்பு அளவிலான பாதுகாப்பை வழங்கி வருவதாக நக்வி தெரிவித்தார்.
குண்டுத் தாக்குதலின் பின்னர் உருவான சூழ்நிலையைத் தொடர்ந்து, மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளும் நவம்பர் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும், ஜிம்பாப்வே அணியும் பாகிஸ்தானில் வந்தடைந்துள்ள நிலையில், டி20 மூவர் நாடுகள் தொடர் லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போட்டிகள் நவம்பர் 18 முதல் 29 வரை நடைபெறும்.
தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர், நக்வி, இஸ்லாமாபாத் பொலிஸ் மாஸ்டர் மற்றும் பிரதான ஆணையர் இணைந்து இலங்கை உயர்ஸ்தானிகர் ரியர் அட்மிரல் ஃப்ரெட் சேனவிரத்னயை சந்தித்து, இலங்கை வீரர்களுக்கான பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
அத்துடன், இலங்கை கிரிக்கெட் குழு, வீரர்கள் பாதுகாப்பு கவலை தெரிவித்தால் மாற்று வீரர்களை உடனடியாக அனுப்பி போட்டிகள் இடையூறில்லாமல் நடைபெற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.





Leave a Reply