ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசின் வருவாய் சாதனையை “மொன்டிசோரி குழந்தையும் செய்ய முடியும்” என சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் சமீபத்திய கருத்துக்கு இன்று கடும் பதில் வழங்கினார்.
ஒரு பொது நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கை வரலாற்றில் முதல்முறையாக அரச வருவாய் எதிர்பார்ப்பை மீறியுள்ளதாகவும், இந்த முக்கிய நிதிசார் சாதனையை தாழ்த்திப் பேசுவதற்காகவே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார்.
“அவர் ஏன் அப்படி சொன்னார் என யோசித்தேன்,” என ஜனாதிபதி குறிப்பிட்டார். “அது வேறு காரணத்திற்காக அல்ல. அவர் சொல்வது — ‘என்னாலும் இதை செய்ய முடியும்’ என்பதே. மொன்டிசோரி குழந்தையாலும் வருவாய் உயர்த்த முடியும் என்று கூறுவதன் மூலம் அவர் தன்னைத் தானே திறமையானவர் என காட்டிக்கொள்கிறார்.”
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பொருளாதார மேலாண்மையின் பலனால் தான் இந்த வருவாய் சாதனை சாத்தியமானது என அவர் வலியுறுத்தினார்.





Leave a Reply