Tag: Health Alert
Sri Lanka News,இலங்கையில் வாய்ப்புற்றுநோயால் தினமும் சராசரியாக மூவர் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனுஜா தக்ஷிணி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் ஆண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோயாக வாய்ப்புற்றுநோய் இருப்பதுடன் பெண்களிடையிலும் அதிகமாகக் காணப்படும் முதல் பத்து புற்றுநோய்களில் ஒன்றாக இது உள்ளதாக கூறினார். புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துதல், சிகரெட் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் ஆகியவை வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய […]
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இணையவழியில் நடத்த தீர்மானித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதேவேளை பல்கலைக்கழகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அனைத்து கல்வி மற்றும் நிர்வாக ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர் […]
இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 67,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் ஜூலை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 10,685 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். நேற்று (10) ஒரே நாளில் மட்டும் சுமார் 1,110 புதிய […]
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக ஒழிப்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள், முப்படைகள் மற்றும் பொலிஸாரை இணைத்த விசேட கூட்டுத் திட்டம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் அதிகம் காணப்படும் 23 வலயங்களை இலக்காகக் கொண்டு தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் விசேட சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தின் மகரகம, […]
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்று புதிய அல்லது மாற்றமடைந்த டெங்கு வைரஸ் காரணமாக ஏற்பட்டது என்ற அரசின் சில கருத்துகளை மருத்துவ நிபுணர்கள் மறுத்துள்ளனர். இதற்கு ஆதாரமாக எந்த அறிவியல் சான்றும் இதுவரை இல்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். குழந்தைகள் நல ஆலோசகர் டாக்டர் லக் குமார் பெர்னாண்டோ இலங்கையில் எந்த ஆய்வகமும் புதிய டெங்கு வைரஸ் வகையை இதுவரை கண்டறியவில்லை என்று தெரிவித்தார். அதேவேளை மூத்த வைத்திய நிபுணர் டாக்டர் உதித விஜேவிக்ரம […]
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,144 ஆக உயர்ந்துள்ளதுடன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி வரையில் மட்டும் 7,302 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். தென்மேற்கு பருவமழையுடன் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் வேகமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது 89 சுகாதார மருத்துவ அதிகாரி […]
Franceபிரான்சில் கோடை காலம் நெருங்கியுள்ள நிலையில் Tick (உண்ணி) கடி சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் Tick கள் மிகவும் செயல்பாட்டுடன் காணப்படுவதால் Lyme Disease உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் CiTIQUE கண்காணிப்பு திட்டத்திற்கு 7,070 Tick கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் மனிதர்கள் மற்றும் செல்லப்பிராணிகள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
செய்தியின் படி தென் அத்திலாந்திக் கடலில் பயணித்த டச்சு சொகுசு கப்பல் MV Hondius இல் ஏற்பட்ட ஹாண்டா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் ஒன்பது பிரிட்டிஷ் குடிமக்கள் முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலுக்காக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்படுகின்றனர். UK Health Security Agency (UKHSA) தெரிவித்ததாவது இவர்கள் அனைவரும் தற்போது அறிகுறிகள் இன்றி இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என கூறியுள்ளது. இதற்கு முன் அந்தக் கப்பலில் இருந்து வந்த சிலர் 45 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர் […]
பிரிட்டனின் UK Health Security Agency (UKHSA) நிறுவனம் MV Hondius கப்பலுடன் தொடர்புடைய Andes Hantavirus பரவல் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பரவல் சம்பவத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில மரணங்களும் பதிவாகியுள்ளன. தற்போது பிரிட்டன் அரசு NHS WHO மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகள் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த கப்பலில் இருந்த பிரிட்டிஷ் பயணிகள் பலர் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு கொண்டு […]