Tag: Youth Arrest
தேரரனிகல நூறி வீதியில் உள்ள ஒரு வீட்டில் அவிசாவெல்லை பிரிவுக் குற்றப் புலனாய்வு பிரிவு (CID) போலீசார் மேற்கொண்ட போதைப்பொருள் சோதனை மோதல் நடவடிக்கையின் போது கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தல் தொடர்பான இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போதைப்பொருள் சோதனை மோதல் நடவடிக்கையில் போலீசார் திடீர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் நான்கு போலீசார் காயமடைந்து அவிசாவெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் நான்கு இளைஞர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். ஆனால் […]
விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடல்களைத் தொடர்புபடுத்தி கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறித்த இளைஞர் மற்றும் அவருடன் தொடர்புடைய சிலரின் செயற்பாடுகள் மக்களைத் தூண்டிவிடும் வகையில் அமைந்திருந்ததாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய சூழல் காணப்பட்டதாகவும் இதன் காரணமாக பாதுகாப்பு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் […]
வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் புலிக்கொடி மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சின்னங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், குறித்த […]