Tag: இலங்கை
திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற 63 வயதுடைய ஒருவர் நேற்று (ஜூலை 17) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த முகம்மது உசன் ஜபருள்ளா கான் (63) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ் தகவலின்படி அவர் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 16) காலை சுமார் 10.00 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். […]
அஸ்வெசுமா (Aswesuma) 2025 நலத்திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை இலங்கை நலன்புரி நன்மைகள் சபையின் Welfare Benefits Board அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் நேரடியாக சரிபார்க்க முடியும். உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய கீழ்க்கண்ட படிகளைப் பின்பற்றுங்கள் அஸ்வெசுமா 2025 பட்டியல் இணையப்பக்கத்தைத் திறக்கவும். முதலில் உங்கள் மாவட்டத்தை (District) தேர்வு செய்யவும். அதன் பிறகு உங்கள் பிரதேச செயலகப் பிரிவை (Division) தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் கிராம […]
போலி GovPay இணையதளம் மற்றும் போக்குவரத்து அபராத SMS மோசடிகள் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அரசின் GovPay டிஜிட்டல் கட்டண சேவையைப் போல தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மற்றும் குறுந்தகவல்கள் (SMS) மூலம் பொதுமக்களின் பணம் மற்றும் வங்கி தகவல்களை மோசடிக்காரர்கள் திருட முயற்சித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, சிலருக்கு “வேக வரம்பை மீறியுள்ளீர்கள்” அல்லது “போக்குவரத்து விதிமீறல் செய்துள்ளீர்கள்” எனக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. அதில் […]
Sri Lanka News, நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் இல்லை என்றும் ஏற்கனவே பலர் சிறையில் உள்ள நிலையில் மேலும் பலர் நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளின் முன் நிறுத்தப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் […]
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் அச்சுனா ராமநாதன் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியில், ஈழத்து மீனவர்கள் ஆமைகள் தொடர்பாக அவர் முன்பு வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தை நகைச்சுவையாக விமர்சிக்கும் வகையில் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அச்சுனா ராமநாதன் கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசியல்வாதி சீமானை விமர்சித்தபோது ஆமைகள் தொடர்பாக தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ஆமைகளின் எடை மற்றும் அவை தொடர்பான […]
இலங்கை யின் ரத்னபுரி மாவட்டம் ரக்வானை பகுதியில் உள்ள Sri Ubayathilakarama Viharaya விகாரையில் நடைபெற்ற 78 வது பொசன் பெரஹர ஊர்வலத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானை ஒன்று ஆவேசமடைந்து தாக்கியதில் யானைப் பாகனும் அவரது 19 வயது உதவியாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி ஊர்வலத்திற்காக கொண்டு வரப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றை இன்று காலை ஆற்றங்கரைக்கு தண்ணீர் கொடுக்க உதவியாளர் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆவேசமடைந்த யானை அவரைத் தாக்கி […]
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை விடுதிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,008 மில்லியன் (ரூ.100.8 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிதி மூலம் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர் விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு தங்குமிட வசதிகள் சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தரமான தங்குமிட வசதிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தி […]
வெளிநாட்டு வேலை பதிவு / புதுப்பிப்பு – முழுமையான வழிகாட்டி 2026 இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் அனைவரும் கட்டாயமாக Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE) இல் பதிவு செய்ய வேண்டும். இது சட்டபூர்வமான பாதுகாப்பையும் காப்புறுதி நன்மைகளையும் அவசர உதவிகளையும் வழங்குகிறது. வெளிநாட்டு வேலை ஒப்பந்தம் விசா மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக SLBFE முக்கிய பாதுகாப்பு அமைப்பாக செயல்படுகிறது. வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் இலங்கையர்களுக்கு SLBFE பதிவு மிகவும் அவசியமானதாகும். […]
இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) உள்ளூர் வணிகங்களை சர்வதேச வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட ‘இலங்கை எக்ஸ்போ 2026’ சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மெகா கண்காட்சி 2026 ஜூன் 18 முதல் 21 வரை கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பங்கேற்கும் உள்ளூர் ஏற்றுமதியாளர்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட உலகளாவிய வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை நேரடியாக […]
AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள அநுர குமார திசாநாயக்க மற்றும் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) நண்பகல் Hyderabad House மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்தியப் பிரதமர் மிகுந்த நட்புடன் வரவேற்று, தனது அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்றதற்காக நன்றியை தெரிவித்ததுடன், இரு தலைவர்களும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் […]