AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள அநுர குமார திசாநாயக்க மற்றும் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) நண்பகல் Hyderabad House மாளிகையில் நடைபெற்றது.


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்தியப் பிரதமர் மிகுந்த நட்புடன் வரவேற்று, தனது அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்றதற்காக நன்றியை தெரிவித்ததுடன், இரு தலைவர்களும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கிய விசேட ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருக்கு தனது நன்றியையும் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.





Leave a Reply