அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்க இறக்குமதி வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில், மோடியின் வேண்டுகோளின்படி இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக இந்தியா அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகத் தடைகளை குறைப்பதோடு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்காவிலிருந்தும், சாத்தியமாக வெனிசுலாவிலிருந்தும் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணமாக இந்திய இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25 சதவீத தண்டனை வரியை அமெரிக்கா ரத்து செய்வதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவிலிருந்து எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்ததாகவும் டிரம்ப் கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “Made in India பொருட்களுக்கு இப்போது 18% என்ற குறைந்த வரி விதிக்கப்படுவதில் மகிழ்ச்சி. இந்த அறிவிப்புக்காக இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் சார்பில் அதிபர் டிரம்பிற்கு நன்றி” என X சமூக ஊடகத்தில் பதிவு செய்தார். இருப்பினும் இது முழுமையான வர்த்தக ஒப்பந்தமா அல்லது வரி குறைப்பை மையமாகக் கொண்ட ஒப்பந்தமா என்பது குறித்து தற்போது தீர்மானிக்க இன்னும் நேரம் தேவை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading