திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற 63 வயதுடைய ஒருவர் நேற்று (ஜூலை 17) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த முகம்மது உசன் ஜபருள்ளா கான் (63) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவலின்படி அவர் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 16) காலை சுமார் 10.00 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து நேற்று (ஜூலை 17) காலை குளக்கரைக்கு அருகில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பே உயிரிழப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் மரணத்திற்கான துல்லியமான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.













Leave a Reply