பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் சில பொருட்களின் இருப்புகள் குறைந்துள்ளன.புயல் காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒகினாவா மாகாணத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இஷிகாகி தீவில் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் படகு சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான புயலாக இது அமையக்கூடும் என அச்சம் நிலவுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.Asia News
ஜப்பானை அச்சுறுத்தும் சக்திவாய்ந்த புயல் சாகிஷிமா தீவுகளில் அவசர எச்சரிக்கை
Asia News,ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தொலைதூர தீவுக் கூட்டங்களை சக்திவாய்ந்த பவி (Typhoon Bavi) புயல் நெருங்கி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஜப்பானின் ஒகினாவா மாகாணத்திற்கு உட்பட்ட தைவானுக்கு அருகிலுள்ள சாகிஷிமா தீவுகள் வழியாக புயல் கடந்து செல்லும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு சுமார் 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இஷிகாகி உள்ளிட்ட தீவுகளில் மக்கள் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி காற்றின் தாக்கத்தை குறைக்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

































