பிரான்ஸ் அரசு, 2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி, வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான காப்பீட்டு திட்டம் (Assurance chômage) தொடர்பான புதிய முன்மொழிவைத் தொழிலாளர் சங்கங்களுக்கும் தொழில்முனைவோர் அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது.

“Lettre de cadrage” எனப்படும் இந்த அறிக்கையின் படி, புதிய விதிமுறைகள் 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக, ஆதரவுத் தொகைகளை குறைத்தல், சலுகை பெற வேண்டிய தகுதிகளை கடுமையாக மாற்றுதல், மற்றும் தேசிய வரவுச்செலவுகளை கட்டுப்படுத்துவதே குறிப்பிடப்படுகிறது.

அரசு அனுப்பிய “Lettre de cadrage” மூலம், புதிய வேலைவாய்ப்பு இல்லாதோர் காப்பீட்டு விதிமுறைகள் குறித்து பேசவும், ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கவும் தொழிலாளர் சங்கங்களும், முதலாளி அமைப்புகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய திட்டத்தில் வேலை இல்லாதோர் பெறும் ஆதரவுத் தொகை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சலுகை பெற தேவையான வேலை செய்த கால அளவு – தற்போது 6 மாதமாக இருந்ததை, 8, 10 அல்லது 12 மாதம் ஆக்க பரிசீலிக்கப்படுகிறது.

திட்டத்தின் மூலம், 2026 முதல் 2029 வரை வருடத்திற்கு 2–2.5 பில்லியன் யூரோ மற்றும் 2030க்கு பிறகு வருடத்திற்கு 4 பில்லியன் யூரோ வருமானச் சேமிப்பு இலக்காக அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சலுகை பெறுவதற்கான வேலை செய்த காலம் தற்போது உள்ள 6 மாதத்திலிருந்து 8, 10 அல்லது 12 மாதமாக உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டம் மூலம், 2026 முதல் 2029 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 2 முதல் 2.5 பில்லியன் யூரோ வரையில் செலவு குறைப்பதையும், 2030 முதல் ஆண்டுக்கு 4 பில்லியன் யூரோ வரை சேமிக்கக் குறிக்கோள் வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் முதலாளி அமைப்புகள் இந்த திட்டம் தொடர்பாக விவாதித்து 2025 நவம்பர் 15 க்குள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். இந்த புதிய கட்டமைப்பு வேலைவாய்ப்பு சந்தையின் இயங்கும் விதத்திலும், வேலை தேடுபவர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading