வலதுசாரி தலைவர் மரீன் லெ பென் மீது விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக Pas-de-Calais மாகாண கவுண்சிலர் பதவி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் பிரான்சின் உயர்ந்த நிர்வாக நீதிமன்றமான Council of State திங்கட்கிழமை அந்த மேல்முறையீட்டை நிராகரித்தது.

மோசடி குற்றச்சாட்டில் லெ பென் தண்டிக்கப்பட்டதுடன் தேர்தலில் நிற்கத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், அவர் வகித்திருந்த உள்ளூர் நிர்வாக பதவி ரத்து செய்யப்பட்டது நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் அவர் 2024 அவசர தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய சட்டமன்ற உறுப்பினர் (MP) பதவி இந்த தடை விதிப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் MP ஆக தொடர அனுமதி உள்ளது.

லெ பென் உள்ளூர் கவுண்சிலர்கள் உடனடியாக பதவி இழக்க ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி தீர்ப்புக்குப் பிறகே பதவி இழப்பது சமத்துவக் கொள்கைக்கு முரணானது என வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் இரு பதவிகளின் அரசியல் பொறுப்புகள் மாறுபடுவதால் இந்த நடைமுறை சட்டபூர்வமானது என தெரிவித்தது.

மரீன் லெ பென் தற்போது தேசிய சட்டமன்ற உறுப்பினர் (MP) பதவியில் தொடர அனுமதி உள்ளது ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் காரணமாக Pas-de-Calais மாகாண கவுண்சிலர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டு விசாரணை 2026 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 12 வரை நடைபெற உள்ளது. அந்த விசாரணையில் தண்டனை உறுதி செய்யப்பட்டால், அவர் 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading