Category: Asia News
டான் பிரியசாத் வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர்கள் அல்லது இனம் தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் விசாரணை தெரிவித்திருந்தாலும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய சந்தேகநபர்களுக்கு தகவல்களை வழங்கியதன் அடிப்படையில் தற்போது மூன்று நபர்கள் கைது […]
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் இலங்கை அரசு வரிகள் தொடர்பான சில மாற்றங்களையும் புதிய நடைமுறைகளையும் இந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்துள்ளது அந்த வகையில் வங்கியில் வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 2025 தொடக்கம் இலங்கையில் வங்கி வட்டி வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் சிறிய மாற்றம் அதாவது ஏற்கனவே 5% இருந்த இந்த வரி அறவீடு ஏப்ரல் […]
இலங்கையில் பெட்ரோலியத்தின் விலை இன்று அதிகாலையில் இருந்து குறைக்கப்படுகின்றது. இதனை இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது இந்த விலை மாற்றமானது இன்று (01.04.2025) அதிகாலை 12 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 92 ஆக்டேன் பெட்ரோலியம் 10 ரூபாயினாலும் 95 ஆக்டேன் பெட்ரோலியம் 10 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 309 லிருந்து பெட்ரோல், ஆக்டேன் 92 ரூ.10 குறைந்து ரூ.299 ஆக உள்ளது. / 371 லிருந்து பெட்ரோல், ஆக்டேன் 95 ரூ.10 குறைந்து லிட்டருக்கு ரூ.361 […]
மியான்மரில் 28/03/2025 காலை வேளையில் இடம் பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 144 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 732 பேர் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இயற்கை அனர்த்தத்தின் அறிகுறி உலகில் பல பாகங்களில் மேலும் பல பேரழிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறியாக கருதப்படுகின்றது. 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கம் மண்டலே அருகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாய்லாந்தில் ஒரு சில பகுதிகள் மற்றும் சீனாவின் ஒரு […]
இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 தேதி நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதாவது இலங்கையில் அனைவராலும் முக்கியமாக வடக்கு கிழக்கு வாழ் அரசியல் பிரமுகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலானது எதிர்வரும் 2025 மே 6ஆம் தேதி அன்று நடைபெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]
தாய்லாந்து நாட்டில் சுற்றுலாப் பயணத்திற்காக ஒரு சில நாடுகளை இலவச விசா அடிப்படையில் தாய்லாந்து அரசு 60 நாட்களுக்கு தங்களது நாட்டு எல்லைக்குள் வருவதற்கு அனுமதி அளித்திருந்தது இந்தச் சலுகை அந்நாட்டு சுற்றுலாத்துறை சார்ந்ததாகவே இருந்தது. தற்போது தாய்லாந்த அரசானது இந்த 60 நாட்கள் இலவச விசா காலக்கெடுவை 30 நாட்களாக குறைக்க முடிவு எடுத்துள்ளது கிட்டத்தட்ட 93 நாட்டவர்களுக்கு இந்த முடிவினை தாய்லாந்து அரசு எடுக்க முனைந்துள்ளதுடன் இதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது தாய்லாந்தில் குறித்த […]
நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரின் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் வேளையில் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் அறிந்து கொண்டு அதன் பின்னரே நீங்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கான ஆயத்தங்களை அதாவது பணம் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் அறிந்த பின்னர் உங்களது பயணத்திற்கு ஏற்ற வகையில் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான சட்ட திட்டத்திற்கு உட்பட்ட […]
பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் எதுவும் தேவைப்பட்டால் மாணவர்கள் முன்கூட்டியே அதனை சரிபார்க்க வேண்டும். பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவிருக்கின்றன. அத்துடன் பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால் பாடசாலை மாணவர்கள் பாடசாலை அதிபரின் உதவியுடன் 2025 மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்னதாக பரீட்சைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மாற்றங்கள் […]
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று (மார்ச் 6, 2025) அவரது பத்தரமுல்லை இல்லத்தில் குற்றப்புலனாய்வு துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது கெலனியா பகுதியில் நிலம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து நிதி மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கமைவாகும் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேர்வின் சில்வா, இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய நபராக அறியப்படுகிறார். முன்னதாக, 2011ஆம் ஆண்டில் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற இருந்த மிருக பலிபூஜையை தடுத்து நிறுத்தியுள்ளார். […]
முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயண செலவுகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிடப்பட்டது தொடர்பாக பிரதமர் மரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முக்கியமான செலவுக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2010 – 2024 காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவுகள் கீழ்வருமாறு: