Category: Asia News
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பணி புரிபவர்கள் இலங்கைக்கான கடவுச்சீட்டுமை பெற்றுக்கொள்ள முடியுமா ? பொதுவாக சவுதியில் இருந்து இலங்கைக்கு கடவுச்சீட்டுகளை விண்ணப்பிக்கும் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை. தூதரகங்களால் அல்லது தூதரகத்தில் பணியாற்றுபவர்களால் சரியான முறையில் வழிநடத்த முடியாது காரணமாக சவுதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளிகள் பெரும் அவலங்களை சந்திக்கின்றனர். மொழிப் பிரச்சனை மற்றும் வேறு வழிகள் இல்லை என்ற சூழ்நிலையில் இந்த கடவுச்சீட்டு தொடர்பான செயல்பாடுகள் மிகவும் தாமதமாகின்றது அல்லது புறக்கணிக்கப்படுகின்றது […]
அனேகமான இடங்களில் மாதாந்த சம்பளங்கள் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகின்ற சம்பளப் பிரச்சனை. குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற முக்கியமாக கம்பெனிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் மாதந்தோறும் இவ்வாறானதொரு பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர். சம்பளங்களை பெற்றுக் கொள்ளும் வேளையில் குறிப்பிட்ட சம்பளத்தை தவிர்த்து குறைக்கப்பட்டு வழங்கப்படும் சம்பளங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் எந்தவித அறிவின்மை காரணமாக கம்பெனியோடு வாதாட முடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் முதலாளி வர்க்கம் தங்களது நிறுவனம் அல்லது கம்பெனியில் […]
இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள நிலங்களை அபகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானி. ஜனவரி 2025 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள், மக்களுக்கு சொந்தமான நிலம் அவர்களிடம் தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அரசாங்கம் வளர்ச்சி திட்டங்கள் அல்லது பாதுகாப்பு தேவைகளுக்காக நிலங்களை கைப்பற்றும் அதிகாரம் கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். ஆனால் […]
வெளிநாட்டில் உள்ள இலங்கைத்தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்களுக்குரிய தீர்வு. ஆன்லைன் முறைபாட்டினூடாக அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக இலங்கை அரசிற்கு எடுத்துரைப்பதற்கான வழிமுறையே கீழ்காணும் வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெறுகின்றன பிரச்சினைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் சார்பில் அவரை சார்ந்தவர்களாலும் இந்த ஆன்லைன் முறைப்பாடுகளை முன்வைக்கமுடியும். கீழ்காணும் இணைப்பினூடாக உங்களுடைய பிரச்சினைக்களுக்குரிய தீர்வுகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இணையவழி முறைப்பாடு / Online Complaint
இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த தாய் நாட்டுக்கு திரும்பும் வேளையில் எடுத்து வரக்கூடிய தங்கம் மற்றும் பணத்தின் அளவு எவ்வளவு தெரியுமா ? இலங்கை விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் பரிசோதனை நடவடிக்கைகளின் போது பயணிகள் எதிர்நோக்கும் பிரதானமான பிரச்சனை சுங்க பிரிவினரின் பரிசோதனை. இந்த பரிசோதனை நடவடிக்கையானது இலங்கை நாட்டிற்குள் வருகின்ற பயணிகள் சட்டவிரோதமான பொருட்களையோ அல்லது சட்டத்திற்கு புறம்பான வகையில் இறக்குமதி தொடர்பான சட்டங்களை மீறும் வகையில் பொருட்களை இலங்கைக்குள் எடுத்து வருபவர்கள் […]
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் வேலை செய்து, SLBFE-யில் பதிவு செய்துவிட்டு நாட்டுக்குத் திரும்பும் மேற்படி தொழிலாளர்களுக்கான பல்வேறு நன்மைகள் வழங்கப்பட உள்ளன. 🔹 முக்கிய நன்மைகள்: குறிப்பு:இவை அனைத்தும் SLBFE-யில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கே பொருந்தும். 📞 மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள SLBFE அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்: http://www.slbfe.lk
பிரான்ஸில் இருக்கும் இலங்கையர்கள் தங்களது கடவுச்சீட்டை புதிதாக பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டும். நீங்கள் பிரான்சிலிருந்து புதிதாக ஒரு கடவுச்சீட்டுக்கு இலங்கை தூதரகத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் போது… 1. எவ்வாறான வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் இலங்கை தூதரகத்தின் ஊடாக பிரான்சிலிருந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய விடையங்கள் முக்கியமாக பிரான்ஸ் நாட்டை பொறுத்த வரைக்கும் இங்கு முன்கூட்டிய அனுமதி என்பது மிகப் பிரதானமான ஒரு விடயம் அந்த வகையில் இலங்கை […]
இலங்கை நாட்டிலிருந்து வெளிநாடு சென்று தொழில் புரிகின்ற அனைவருக்கும் இலங்கை அரசினால் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள இந்த கடன் வசதி திட்டத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழியை இலங்கை அரசு தற்போது ஏற்படுத்தி தந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அதனுடன் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் […]
டான் பிரியசாத் வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர்கள் அல்லது இனம் தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் விசாரணை தெரிவித்திருந்தாலும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய சந்தேகநபர்களுக்கு தகவல்களை வழங்கியதன் அடிப்படையில் தற்போது மூன்று நபர்கள் கைது […]
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் இலங்கை அரசு வரிகள் தொடர்பான சில மாற்றங்களையும் புதிய நடைமுறைகளையும் இந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்துள்ளது அந்த வகையில் வங்கியில் வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 2025 தொடக்கம் இலங்கையில் வங்கி வட்டி வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் சிறிய மாற்றம் அதாவது ஏற்கனவே 5% இருந்த இந்த வரி அறவீடு ஏப்ரல் […]