சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பணி புரிபவர்கள் இலங்கைக்கான கடவுச்சீட்டுமை பெற்றுக்கொள்ள முடியுமா ?

பொதுவாக சவுதியில் இருந்து இலங்கைக்கு கடவுச்சீட்டுகளை விண்ணப்பிக்கும் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை.

தூதரகங்களால் அல்லது தூதரகத்தில் பணியாற்றுபவர்களால் சரியான முறையில் வழிநடத்த முடியாது காரணமாக சவுதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளிகள் பெரும் அவலங்களை சந்திக்கின்றனர்.

மொழிப் பிரச்சனை மற்றும் வேறு வழிகள் இல்லை என்ற சூழ்நிலையில் இந்த கடவுச்சீட்டு தொடர்பான செயல்பாடுகள் மிகவும் தாமதமாகின்றது அல்லது புறக்கணிக்கப்படுகின்றது சில நேரங்களில் கப்பங்களும் கோறப்படுகின்றது

இலங்கை அரசு இது தொடர்பாக எவ்வாறான முயற்சிகள் எடுத்திருப்பினும் வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற பணியாளர்கள் இன்னும் இந்த பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர்.

மேலே காணப்படும் காணொளி

ஒரு புதிய கடவுச்சீட்டு சவுதியில் இருந்து இலங்கைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, காலம் அல்லது தேதி முடிவடைந்த ஒரு கடவுச்சீட்டு எவ்வாறு புதுப்பிப்பது, அல்லது சவுதி அரேபியாவில் இருந்து சட்டவிரோதமாக பணிபுரியும் இளைஞர்கள் நாட்டுக்கு செல்வதற்கு எவ்வாறு கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வது இது தொடர்பாக விளக்குகின்றது.

காணொளியில் குறிப்பிட்ட வகையில் முறையாக ஆவணங்களை தயார் படுத்திய பின்னால் விண்ணப்ப படிவங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து உங்களுடைய கடவுச்சீட்டு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

இது தொடர்பான உத்தியோக பூர்வ தகவல்கள் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகங்களின் வலைதளங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading