இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்சேதமோ காயமோ ஏற்படாததுடன் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் மட்டும் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதாகக் கூறப்படும் ரஸல் அலோசியஸ் ஸ்மித்தின் தந்தையின் சகோதரரின் மகன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் ரஸல் அலோசியஸ் ஸ்மித் பாதாள உலகக் குழுத் தலைவர்களாகக் கூறப்படும் ‘அஞ்சு’ என அழைக்கப்படும் சிங்ஹார அமல் ஷமிந்த சில்வா மற்றும் ‘தர்மே’ எனப்படும் எல்லாவல லியனகே தர்மசிரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் பின்னர் அஞ்சுவுடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





























