Tag: AKD
இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம். இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்பட்டு வந்த Merchant Discount Rate (சேவைக்கட்டணம்) முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் எந்த கூடுதல் செலவும் இன்றி […]
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் – தம்மாம் மற்றும் கொழும்பு சேவை மீண்டும் ஆரம்பம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திருத்தப்பட்ட புறப்படும் நேரங்களுடன் தம்மாம் மற்றும் கொழும்பு இடையேயான தனது விமான சேவைகளை 2026 ஏப்ரல் 7 முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. விமான இயக்க அறிவிப்பின்படி UL254 என்ற விமானம் தம்மாமிலிருந்து கொழும்பு நோக்கி மாலை 18:25 மணிக்கு புறப்படும். அதே நேரத்தில் UL253 என்ற விமானம் கொழும்பிலிருந்து தம்மாம் நோக்கி மதியம் 13:40 மணிக்கு புறப்படும். மேலும் […]
இலங்கையில் சுற்றிவளைப்பு – 34 மற்றும் 58 வயதுடைய இருவர் அதிரடியாக கைது . 2026.04.03 அன்று காலை மினுவாங்கொட பொலிஸ் விசேட நடவடிக்கைப் படையினர் கொத்துகொட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 3830 லிட்டர் கோடா (24 பேரல்கள்) கள்ளச்சாராயத்துடன் 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதே நாளில் மாலை பாமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் முத்துராஜவெல வகுருபீம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் […]
துறைநீலாவணை ஆலய தாக்குதல் – தலைவர் உட்பட 7 பேர் கைது மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் உள்ள உச்சிமா காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் மேற்கொண்டதாக கூறப்படும் இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி […]
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை பகுதியில் அமைந்துள்ள உச்சிமா காளி அம்மன் ஆலயத்தில் பூஜை நிகழ்வின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கடுமையான கைகலப்பாக மாறி சிலர் உயிருக்கு ஆபத்தான அளவில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவலின்படி ஆலயத்தில் நடைபெற்ற பூஜை நேரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறியதுடன் பின்னர் அது உடல் மோதலாக தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்புடைய சிலர் தங்களை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக கூறியுள்ளனர். மேலும், தாக்குதலில் […]
புதிய இலங்கை கடவுச்சீட்டுகள் – ஜித்தா தூதரகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பின்வரும் பற்றுச்சீட்டு இலக்கம் கொண்ட புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்கள் இவை ஜித்தா இலங்கை தூதரகத்தின் கொன்சல் ஜெனரல் அலுவலகத்திலிருந்து பெறலாம். புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் போது அசல் மஞ்சள் நிறப் பற்றுச்சீட்டையும் பழைய கடவுச்சீட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வீடமைப்புத் திட்டம் – 2 மில்லியன் ரூபா வரை நிதியுதவி. 2025 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக நிறுவன ரீதியான பராமரிப்பில் இருந்து சமூகத்திற்குத் திரும்பும் குறைந்த வருமானம் கொண்ட தம்பதியினருக்கு வீட்டு வசதிகளை வழங்கும் நோக்கில் “திவியட்ட சவியக்” வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை 18-08-2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வீடமைப்புத் திட்டம் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு […]
இலங்கையில் மின்சார பாவனை – புதிய வழிகாட்டல் வெளியீடு. இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்கள் (வழிகாட்டி இலக்கம் 02) அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, அரசு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களில் பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் அனைத்து […]
இலங்கையைக் காப்போம் – வலுசக்தி பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம் வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் நேற்றைய தினம் (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் வலுசக்தி வளங்களை பாதுகாக்கும் சமூகத்தை உருவாக்குவதாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய “எல்-நினோ” வானிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகளை குறைக்கும் நோக்கில் […]
அரசாங்க உதவித்திட்டம் – குறைந்த வருமானம் கொண்டோரின் வாழக்கைத்தர மேம்பாடு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நீடித்த முன்னேற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக ‘மெட்ரோ அப்லிஃப்ட்’ தேசியத் திட்டம் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. கொலன்னாவ சலமுல்லாவில் அமைந்துள்ள ‘லக்ஷத சேவனா’ வீட்டுவசதி வளாகத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது முக்கிய நோக்கமாகும். அரசாங்க உதவித்திட்டம் […]