September 11, 2026
Breaking News
மேம்பட்ட AI மாதிரிகள் உருவாக்க வேகத்தை குறைக்க OpenAI ஆலோசனை ஓமன் கசாப் அருகே இரு கப்பல்கள் மீது நான்கு மர்ம எறிபொருட்கள் தாக்குதல் துபாயில் வேலை தேடுவதற்கான விசா: தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறை ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் மேம்பட்ட AI மாதிரிகள் உருவாக்க வேகத்தை குறைக்க OpenAI ஆலோசனை ஓமன் கசாப் அருகே இரு கப்பல்கள் மீது நான்கு மர்ம எறிபொருட்கள் தாக்குதல் துபாயில் வேலை தேடுவதற்கான விசா: தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறை ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள்

Tag: Breaking News

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் மோசடி

இலங்கையின் திறைசேரியிலிருந்து மூன்றாம் தரப்பினருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான அரச நிதி பற்றிய நாடாளுமன்ற குழு (COPF) அறிக்கை இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரச நிதி பற்றிய குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியபோது குறித்த நிதி பரிமாற்றம் சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி என குழு கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மீள்செலுத்தல் செயல்முறை குறித்து தேசிய […]

நீர்கொழும்பு சிறை வன்முறை விரிவான விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் மோதல்களுக்கு வழிவகுத்த காரணங்கள் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உயிரிழப்புகள், காயங்கள், சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆராயப்படவுள்ளன. மேலும், நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரு கைதிகளின் மரணங்களும் விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது […]

ஈரானின் பதிலடி அமெரிக்க தளங்கள் குறிவைப்பு

அமெரிக்கா ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் மூலோபாய கட்டமைப்புகள் மீது மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியதையடுத்து ஈரானுடன் இருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 80-க்கும் மேற்பட்ட முக்கிய கட்டமைப்புகளை அமெரிக்கப் படைகள் […]

நீர்கொழும்பு சிறை வன்முறை பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து பேர் கொண்ட தடயவியல் மருத்துவக் குழு 24 உடல்களுக்கு மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையின் படி சிறை அதிகாரிகள் தலையில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல்களால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மரணங்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டாலும் 9 பேர் கொடூரமான தாக்குதல்களாலும் […]

அதிகாரிகளின் தலையில் கற்களால் தாக்கி கொலை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அதிகாரிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி காலை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு பின்னர் கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. முதலில் ஒரு […]

ஈரானிய எண்ணெய் விற்பனை உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்தது

ஈரானிய எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டிருந்த பொது உரிமத்தை அமெரிக்க திறைசேரி ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 2026 ஜூன் 21ஆம் திகதி அமல்படுத்தப்பட்டிருந்த பொது உரிமம் X ஜூலை 7 முதல் ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக புதிய பொது உரிமம் X1 முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமெரிக்கா கடந்த […]

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை இரவு குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் கணிசமான சேதமடைந்ததாகவும் எனினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஓமானின் லிமா கடற்பகுதிக்குக் கிழக்கே தெற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத […]

ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது – ட்ரம்ப் அறிவிப்பு

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கப் படைகள் ஈரானிய இலக்குகளைத் தாக்கியதை அடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. […]

239 பேருந்து ஊழியர்கள் போதையில் சிக்கினர்

Sri Lanka News,மேல் மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையில் 239 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு நேர்மறையாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (NTMI) மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த விசேட சோதனை கடந்த சில வாரங்களாக மேல் மாகாணத்தின் பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களில் முன்னெடுக்கப்பட்டது. பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி […]

ஜெர்மனியை உலுக்கிய மருத்துவரின் கொடூரம்

Europe News,ஜெர்மனியின் பெர்லின் நகரில் பணியாற்றிய 41 வயதுடைய நிவாரண சிகிச்சை மருத்துவருக்கு தனது 15 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் தனியுரிமை சட்டங்களின்படி யோஹன்னஸ்.எம் என மட்டும் அடையாளம் வெளியிடப்பட்டுள்ள அவர் 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரை 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களை கொலை செய்ததாக நீதிமன்றம் உறுதி செய்தது. வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தபோது நோயாளிகளின் அனுமதியின்றி உயிரிழப்பை ஏற்படுத்தும் மருந்துக் கலவையை […]