September 10, 2026
Breaking News
பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்

Tag: Jaffna News

படுகொலை வழக்குகளுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

ஊடகவியலாளர் போராட்டம், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (31) ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டம் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் கௌசல்யா ஆரியரத்னவின் இருநாள் யாழ்ப்பாணப் பயணத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட […]

யாழ் பல்கலை வழக்கில் தீர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் அப்போதைய பல்கலைக்கழக பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர். கபிலன் தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டை பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபை தள்ளுபடி செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதன் அடிப்படையில் பல்கலைக்கழக விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவரை தாவரவியல் துறைத் தலைவர் பதவியில் இருந்து அப்போதைய பேரவை நீக்கியிருந்தது. அந்தப் பதவி நீக்கம் சட்டவிரோதமானது என்றும் […]

யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.3 மில்லியன் அபராதம்

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை மீறி முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count – FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் கூடுதல் தொகை அறவிட்டதை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணம் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ரூ.3 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிர்ணயித்தபடி FBC பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.400 ஆக இருந்த போதிலும் குறித்த வைத்தியசாலை ரூ.550 அறவிட்டது ஜூலை 13ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கண்டறியப்பட்டது. இதையடுத்து […]

சர்வதேச விசாரணை கோரி யாழில் மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழு இன்று (22) விஜயம் மேற்கொண்ட நிலையில் மயானத்துக்கு வெளியே ஏ-9 வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்நாட்டு விசாரணை முறைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் எதிர்பார்த்த நீதியை வழங்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்த போராட்டக்காரர்கள் […]

செம்மணி புதைகுழி அகழ்வில் சிசு உட்பட மேலும் 8 என்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 38ஆவது நாள் இன்று (20) முன்னெடுக்கப்பட்டபோது சிசு ஒன்றின் என்புக்கூடு உட்பட மேலும் எட்டு என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்றைய அகழ்வில் இரண்டு சிறுவர்களின் என்புக்கூடுகள் மற்றும் ஒரு சிசுவின் என்புக்கூடு உள்ளிட்ட புதிய எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று உட்கார்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட என்புக்கூட்டை சுத்தம் செய்யும் பணிகளும் இன்றும் […]

யாழில் விபத்து இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சுட்டிபுரம் பகுதியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த சின்னராசா துளசிகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக பருத்தித்துறை ஆதார […]

சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவிருந்த நடைபவனியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக பழைய மாணவர்கள் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விக்டோரியா கல்லூரியுடன் தொடர்புடைய பழைய மாணவர்களில் ஒருவரே பிரதம விருந்தினராக அழைக்கப்பட வேண்டும் என்றும் பாடசாலை நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் பாடசாலை அதிபர் சுலபாமதி […]

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மொத்தமாக 420 எலும்புத் தொகுதிகள்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (16) 34ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளுடன் மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புத் தொகுதிகளில் மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனவும் ஒரு குழந்தையின் எலும்புத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் […]

யாழில் கனடா வேலைவாய்ப்பு மோசடி

கனடா மற்றும் லக்சம்பர்க் நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரிடமிருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் 38 வயதுடைய நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையில் கொலன்னாவாவைச் சேர்ந்த ஃபைஸ் முகமது நஃப்திகர் என்பவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து பெருமளவு பணம் பெற்றதாக […]

இராணுவ விவசாயம் குறித்து புதிய சர்ச்சை

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர் வலி.வடக்கில் 1,661 ஏக்கர் காணி இராணுவத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான இழப்பீடு காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயம் இராணுவத்தின் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமே என கூறியிருந்தார். எனினும் அந்தக் கூற்றை நிராகரித்துள்ள வலி.வடக்கு மக்கள் தங்களது […]