Tag: Kalutara
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாடகை வீட்டொன்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட 27 வயதுடைய நதுனி சஹஸ்ரீ குரே என்ற இளம்பெண்ணின் கொலை தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளின்படி உயிரிழந்த பெண் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்த 27 வயது ஆணுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த இரவு பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது தனது தாய் […]
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக ஒழிப்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள், முப்படைகள் மற்றும் பொலிஸாரை இணைத்த விசேட கூட்டுத் திட்டம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் அதிகம் காணப்படும் 23 வலயங்களை இலக்காகக் கொண்டு தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் விசேட சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தின் மகரகம, […]
காலி–கொழும்பு பிரதான வீதியின் கட்டுக்குருந்த பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பாட்டியும் 12 வயதுடைய பேரனும் உயிரிழந்துள்ளனர். பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த விபத்து புதன்கிழமை (01) நள்ளிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருவளையில் நடைபெற்ற பொசன் போயா தின வழிபாடுகளை முடித்துவிட்டு நான்கு பேர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த பாட்டியும் பேரனும் […]
இலங்கையில் 7 மாவட்டங்களில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, கலுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களில் அதிகமான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வழங்கிய தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 4,617 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு, கம்பஹா மற்றும் கலுத்துறை மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த […]