Tag: Sri lanka Politics
Sri Lanka News, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தாம் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிடும்போது நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இங்கு இருப்பேன் என்று குறிப்பிட்டார். மேலும் தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரி ஓஷல […]
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல மர்ம மரணங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் 323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்த டேன் பிரியசாதின் மரணம் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணையுடன் தொடர்புடைய முன்னாள் அதிகாரியின் உயிரிழப்பு மற்றும் 2.5 […]
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளிலும் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தாமல் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீட்டிப்பதற்காக அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தத்தை அவசரமாக முன்னெடுத்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும் […]
சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளரும் சட்டத்தரணியுமான நளின் பத்திரன முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் மற்றும் நாட்டில் முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்கள் தொடர்ச்சியாக உயிரிழப்பது தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். கட்சியின் காரியாலயத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக முறையான மரணப் பரிசோதனை அல்லது நீதவான் விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே அது தற்கொலை என ஊடகங்களில் பரவலாகச் […]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினன தகுண அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) அண்மையில் நடத்திய சமூகக் குறிகாட்டி கருத்துக்கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 64.1 சதவீதமானோர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகப் பரவலாக்கத்தின் முக்கிய அம்சம் என 67 சதவீதமானோர் கருதுவதாகவும் […]
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடும் வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழ்நிலையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திருவையாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தென்னைச் செய்கைத் திட்டத்தில் தென்னை நாற்று விநியோகம் மற்றும் நடுகை நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகளையும் விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் […]
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் வெறுமனே ஒரு கலவரமாக அல்லாது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் பொருளாதாரம் வாழ்விடங்கள் மற்றும் சொத்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும் சுமார் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களுக்கும் அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் சில எதிர்க்கட்சிக் குழுக்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடைபெற்று வரும் விசாரணைகளையும் சம்பவங்களின் உண்மையான பின்னணியையும் திசைதிருப்ப முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், சிறைச்சாலைகளுக்குள் உள்ள சில தரப்பினரும் அரசின் திட்டங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொதுநலக் கோரிக்கைகள் தொடர்பாக ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கும் நோக்கில் ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளன. இந்த ஒப்பந்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (13) திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட ஊடக சந்திப்பில் வெளியிடப்படவுள்ளதாக கட்சிகள் தெரிவித்துள்ளன. தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுவான விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், அதன் நோக்கம் செயற்பாட்டு திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் […]
நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் நீதவான் பசன் அமரசேன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுவதற்காக இன்று (11) கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் விசேட பொதுச் சபை கூட்டம் நடத்தப்படவிருந்த நிலையில் அந்தக் கூட்டம் தொடர்பாக உருவான சர்ச்சையே அவரது பதவி விலகலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனிடையே தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கும் வகையில் […]