Tag: Sri lanka Politics
நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால் குடும்பங்களை குழந்தை பெற ஊக்குவிக்கும் வகையில் நிதி ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் சமர்ப்பித்துள்ள பிரேரணையில் 2018 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் வருடாந்திர குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும் இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இளைஞர் சனத்தொகை கணிசமாகக் குறையக்கூடும் […]
Sri Lanka News,இலங்கையின் எதிர்கால சட்டங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தித் திட்டங்கள், மக்கள் தொகை மாற்றங்களையும் நம்பகமான தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதற்கான முக்கிய நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் இலங்கை பாராளுமன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம், கொள்கை வகுப்பில் மக்கள் தொகைத் தகவல்கள், சமூக ஆதாரங்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை முறையாகப் பயன்படுத்தும் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் வயோதிப மக்கள் தொகை […]
விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா தொடர்பாக புதிய தகவல்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனு நேற்று (09) நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் முக்கிய விடயங்களை முன்வைத்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனக் டி […]
இலங்கையின் திறைசேரியிலிருந்து மூன்றாம் தரப்பினருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான அரச நிதி பற்றிய நாடாளுமன்ற குழு (COPF) அறிக்கை இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரச நிதி பற்றிய குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியபோது குறித்த நிதி பரிமாற்றம் சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி என குழு கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மீள்செலுத்தல் செயல்முறை குறித்து தேசிய […]
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தாம் அணிந்து வந்திருந்த ஆடை தொடர்பாக எழுந்த எதிர்ப்புக்கு ஆவேசமாக பதிலளித்த சம்பவம் இன்று (09.07.2026) நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான ராமநாதன் அர்ச்சுனா அணிந்திருந்த ஆடை தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியதைத் தொடர்ந்து உடனடியாக பதிலளித்த அர்ச்சுனா தாம் நாடாளுமன்ற மரபுகளுக்கு ஏற்ப பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் “நான் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே […]
சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக நீடித்து வரும் அதிகளவான இராணுவக் குவிப்புக்கு எதிராக மீண்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்திருந்தாலும் தமிழர் தாயகப் பகுதிகளில் பெருமளவு இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் வன்முறை துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு வளங்கள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக வடகிழக்கில் இராணுவ மயமாக்கலைத் தொடரவும் தமிழ் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலைத் தொடங்கிய சில கைதிகள் ஆயுதங்களைப் பெற்று இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் சிறைக்குள் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் நுழையும் வழிமுறையைச் சீர்குலைப்பதே மோதலில் ஈடுபட்டவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் அவர் கூறினார். ஆயுதமற்ற இரண்டு சிறை அதிகாரிகள் முதலில் தாக்கப்பட்டதாகவும் அவர்களை மீட்க சென்ற பிற அதிகாரிகளும் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பலர் உயிரிழந்த விவகாரத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முழுப் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சிறைச்சாலைகளில் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்களுக்கு அப்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்ததை நினைவூட்டினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2020 நவம்பர் […]
எதேச்சாதிகார, சர்வாதிகார மற்றும் தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயக நாட்டை உருவாக்க அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். “இலங்கை சிவில் சமூகங்களின் பயணப் பாதை” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற சிவில் சமூக அமைப்புகளின் விசேட ஒன்றுகூடலில் உரையாற்றிய அவர் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள் சீர்குலைக்கப்படும் சூழலில் சிவில் சமூக அமைப்புகளும் சுதந்திர ஊடகங்களும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் […]
Sri Lanka News, நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் இல்லை என்றும் ஏற்கனவே பலர் சிறையில் உள்ள நிலையில் மேலும் பலர் நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளின் முன் நிறுத்தப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் […]