Month: June 2026
பிரான்சில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை புகார்கள், பிரான்சில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 88,000 புகார்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு வழக்கறிஞர்களால் (Procureurs) மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சமீபத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய சிறுமி லியானா (Lyhanna) வழக்கைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மீளாய்வின் நோக்கம் இதுவரை போதுமான அளவில் விசாரிக்கப்படாத அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் பரிசீலித்து தேவையான இடங்களில் விசாரணையை […]
உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (WhatsApp)பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் புதிய பயனர் பெயர் (Username) அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய வசதி அறிமுகமானால் இனி புதிய நபர்களுடன் தொடர்புகொள்வதற்கு தொலைபேசி எண்ணை பகிர வேண்டிய அவசியம் இல்லாமல் பயனர் பெயர் மூலமாகவே உரையாடலை தொடங்க முடியும். தற்போது வாட்ஸ்அப்பில்(WhatsApp) ஒருவருடன் உரையாட அவர்களின் மொபைல் எண் அவசியமாக உள்ளது. ஆனால் புதிய மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு பயனரும் தங்களுக்கென […]
Livret A வட்டி விகிதம், பிரான்சில் பரவலாக பயன்படுத்தப்படும் Livret A சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் உயரவுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரோலண்ட் லெஸ்கியூர் (Roland Lescure) தெரிவித்துள்ளார். புதிய வட்டி விகிதம் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என்றும் அது 2026 ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது வட்டி விகிதம் 1.5% ஆக உள்ளது. அண்மையில் பணவீக்கம் மீண்டும் உயர்ந்துள்ளதால் சட்டப்படி பயன்படுத்தப்படும் கணக்கீட்டு முறையின் அடிப்படையில் வட்டி […]
பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள சில நிபந்தனைகள் அரசாங்கப் பரீட்சைகளின் இரகசியத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக குறித்த சுற்றறிக்கையை உடனடியாக இடைநிறுத்தி தேவையான திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் சி.பி. இலங்கசிங்க தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் சுற்றறிக்கையின் 7.5ஆம் இலக்கத்தின் கீழ் பல்கலைக்கழக […]
குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேகநபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது என்றும் அனைத்து விசாரணைகளும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக சுயாதீனமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். விசாரணைகளின் உள்தகவல்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு வெளியிடப்படாவிட்டாலும் […]
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலும் தனது உறுதியை இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற 7வது Global Conference on Climate and Sustainable Development Goals (SDG) Synergies மாநாட்டில் உரையாற்றியபோது வெளியிட்டார். அவர் கூறுகையில் காலநிலை […]
வெசாக் பண்டிகைக் காலத்தில் 92 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை ரூ.36 உயர்த்திவிட்டு தற்போது பொசன் பண்டிகையை முன்னிட்டு வெறும் ரூ.20 மட்டுமே குறைத்துள்ள அரசாங்கம் மக்களை ஏமாற்றும் நாடகத்தில் ஈடுபடுவதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இந்த சொற்ப விலைக்குறைப்பால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்பதால் தற்போதைய […]
நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வேக வரம்பை மீறும் வாகனங்கள் மற்றும் சட்டவிரோத அலங்காரங்களுடன் இயங்கும் பேருந்துகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் ரவீன் சுமனரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பேசிய அவர் நகரப் பகுதிகளிலும் நகரத்திற்கு வெளியேயும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக வரம்புகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பாடசாலை வலயங்களில் வேக வரம்பை மேலும் குறைக்கும் புதிய வர்த்தமானி தயாராகி […]
பிரான்ஸ் வேலை இழப்பு உதவித்தொகை, பிரான்சில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் 2026 ஜூலை 1 முதல் வேலை இழப்பு உதவித்தொகை (ARE) உயர்த்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் வேலை இழப்பு உதவித்தொகை (Allocation chômage) மறுமதிப்பீடு செய்யப்படுவது வழக்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு அதற்கான உயர்வை வழங்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தற்போது வேலை இழப்பு உதவித்தொகை பெற்று வரும் இலட்சக்கணக்கான […]
வவுனியா மாநகர சபையின் செங்கோல் முதல்வரின் அங்கி மற்றும் பதக்கம் என்பன முன்னாள் முதல்வரால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாநகர சபை செயலாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக மாநகர சபை உறுப்பினர்கள் பிரேமதாஸ் மற்றும் சி. கிரிதரன் தெரிவித்துள்ளனர். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்கள் ஆளுநரின் உத்தரவின் பேரில் முன்னாள் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது தனிப்பட்ட பொருட்களுடன் மாநகர சபைக்குச் சொந்தமான செங்கோல், முதல்வரின் அங்கி மற்றும் பதக்கத்தையும் […]