Tag: Breaking News
Europe News,ஜெர்மனியின் பெர்லின் நகரில் பணியாற்றிய 41 வயதுடைய நிவாரண சிகிச்சை மருத்துவருக்கு தனது 15 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் தனியுரிமை சட்டங்களின்படி யோஹன்னஸ்.எம் என மட்டும் அடையாளம் வெளியிடப்பட்டுள்ள அவர் 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரை 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களை கொலை செய்ததாக நீதிமன்றம் உறுதி செய்தது. வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தபோது நோயாளிகளின் அனுமதியின்றி உயிரிழப்பை ஏற்படுத்தும் மருந்துக் கலவையை […]
வவுனியா – புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துச் சென்ற சுமார் 55 வயதுடைய ஆண் ஒருவர் இரு வாகனங்கள் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (07) இரவு சுமார் 8.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியாவில் இருந்து அதிவேகமாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹயஸ் ரக வாகனம் முதலில் பாதசாரியை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் தாக்கத்தில் தூக்கி எறியப்பட்ட நபர் எதிர்திசையில் யாழ்ப்பாணத்திலிருந்து […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க வழங்கிய தகவலின்படி குறித்த கைதியின் மரணத்திற்கான துல்லியமான காரணம் தொடர்பான மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு இருந்த 1,033 கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கலவரத்தை […]
ஈரான் எண்ணெய் தடைகள், ஹோர்முஸ் நீரிணை தாக்குதல்களுக்கு பின், ஈரானுக்கு வழங்கப்பட்ட எண்ணெய் தடைவிலக்கு சலுகைகளை அமெரிக்கா ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பின்னர், ஈரானுக்கு வழங்கப்பட்ட ஈரான் எண்ணெய் தடைகள் விலக்கு சலுகைகளை அமெரிக்கா ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான இடமாக கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்துள்ளது. ஜூன் 22, 2026 அன்று, அமெரிக்க நிதித்துறை […]
கொலைக்களமான நீர்கொழும்பு சிறை வரலாற்றில் இல்லாத வன்முறை மிகக் கொடூரமான சம்பவமாகப் பதிவாகியுள்ளது. கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு சிறிது நேரத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்த கொடூரமான தாக்குதலாக மாறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 100 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய நாள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த பதற்றம் […]
பாணந்துறை வடக்கு கல்கனுவ வீதியில் அமைந்துள்ள வாடகை வீட்டொன்றில் இருந்து 26 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் படிப்பு பயின்று வந்த மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து தனது கல்வியைத் தொடர்ந்து வந்ததுடன் சட்டத்தரணி ஒருவரின் அலுவலகத்தில் சட்டப் பணிகளுக்கும் உதவி செய்து வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் […]
Africa News,ஜிம்பாப்வே தேசிய கால்பந்து அணியின் முன்னணி வீரர் டிவைன் லுங்கா தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப தகவல்களின் படி அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தென்னாப்பிரிக்க காவல்துறை தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அங்கிருந்த 60 கைதிகள் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட கடுமையான மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட பலர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலையையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் மையமாகக் கொண்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நிலைமையை […]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பகுதியில் தனியாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 25 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மக்களின் காணிகளை அபகரிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மக்களின் காணிகள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் தகவல்கள்,இதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்திவாய்ந்த அரசியல் ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு எதிராக முந்தைய காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த மோதல் கடந்த காலங்களில் பதிவான சம்பவங்களிலிருந்து வேறுபட்டதாக […]