Tag: Breaking News
பிரான்சில் கடும் வெப்ப அலை,பிரான்சில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக அரசு பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாட்டின் 35 மாவட்டங்களுக்கு மிக உயர்ந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 45 மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன. இதனால் பிரான்ஸ் மக்கள்தொகையின் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். ஜூன் 21 அன்று நடைபெறும் பாரம்பரிய Fête de la Musique இசை விழா கொண்டாட்டங்கள் வெப்ப அலை காரணமாக கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டன. சில நகரங்களில் […]
கொழும்பு வெல்லம்பிட்டிய நகரில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று (21) மாலை சுமார் 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவியதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவசர சேவைப் பிரிவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கும் அதனை முழுமையாக அணைப்பதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் […]
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹுங்கம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்ன – வீரகெட்டிய வீதியின் நூலக வீதிக்கு திரும்பும் சந்தியருகே நேற்று (20) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரன்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த […]
கண்டி மாவட்டத்தின் குண்டசாலை வராபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் 23 வயதுடைய திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம் அவரது கணவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தாக்கி கொலை செய்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இசைக் கச்சேரி ஒன்றைப் பார்ப்பதற்காக […]
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 30ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (21) நடைபெற்ற நிலையில் மேலும் 07 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மணி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 377 எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அகழாய்வு பணிகளின் மூலம் மேலும் பல […]
காலி மாவட்டத்தின் கொக்கல ஆற்றுப் பகுதியில் இன்று (21) காலை குளிக்கச் சென்ற இரண்டு நபர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் ஆற்றில் இறங்கி நீந்த முற்பட்ட வேளையில் எதிர்பாராத விதமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீரில் மூழ்கிய இருவரில் ஒருவரை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை நீரில் […]
அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் தொடங்க உள்ளதால் உலக கவனம் அதில் குவிந்துள்ளது. அதேவேளை ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக புதிய பதற்றம் உருவாகியுள்ளது.முதலில் ஈரான் அந்த நீரிணை மூடப்பட்டதாக அறிவித்தது. ஆனால் அமெரிக்கா அந்தக் கூற்றை உடனடியாக மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பியுள்ளன. மேலும் ஈரான் உயர்மட்ட குழு சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளது. அதேபோல் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் முக்கிய […]
இலங்கைக்கு எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்வளைகுடா நாடுகள் (சவுதி அரேபியா, UAE, கத்தார், குவைத், ஓமான், பஹ்ரைன்) உள்ளிட்ட எந்த நாட்டிலிருந்தும் இலங்கைக்கு வரும்போது தங்கத்தை வரம்பின்றி கொண்டு வர முடியாது. இலங்கை சுங்க விதிகளின்படி (2026) பயணிகள் தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான நகைகளை மட்டுமே நியாயமான அளவில் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் 10 பவுன், 20 பவுன் வரை வரி இல்லை போன்ற தகவல்கள் பரவலாக பகிரப்படுகின்றன. ஆனால் இலங்கை சுங்கத் திணைக்களம் […]
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் (Dehiwala Zoo) உள்ள சிங்கக்குட்டிகளை (lion cubs) பொதுமக்கள் பார்க்கக்கூடிய இறுதி வார இறுதி நெருங்கியுள்ளது.தெஹிவளை சிங்கக்குட்டிகள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த குட்டிகளை நேரில் காணும் வாய்ப்பு ஜூன் 21 வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் பாதுகாப்பு காரணங்களால் அவற்றை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது நிறுத்தப்பட உள்ளது. இந்த குட்டிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று பிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவை வளர்ச்சியடைந்து வருவதால் அவற்றை வெளியில் கொண்டு வந்து பார்வையிட […]
கண்டி இளம் மனைவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டசாலை வாராபிட்டிய பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய திருமணமான பெண்ணின் உடல் இன்று (20) அதிகாலை அவரது கணவரின் வீட்டில் உள்ள படுக்கையறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டி இளம் மனைவி மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள் கடுமையான சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் கணவர் அளித்துள்ள […]