Tag: China
Bamboo Bio Fence, இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வரும் மனிதர் யானை மோதலைக் குறைக்கும் நிலையான தீர்வாக மூங்கில் உயிரியல் வேலி அமைக்கும் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையம் (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது […]
Sri Lanka Tourism, 2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி ஜனவரி 1 முதல் ஜூலை 26 வரை மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஜூலை 1 முதல் ஜூலை 26 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 167,401 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன் […]
சீனா நிலநடுக்கம், சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் (Qinghai) மாகாணத்தின் சிங்ஹாய் மாவட்டத்தில் இன்று (28.07.2026) அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் காலை 11:16 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவான நிலையில் அதற்கு வெறும் 18 நிமிடங்கள் கழித்து அதே பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த இரு நிலநடுக்கங்களும் பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் […]
சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் சக்திவாய்ந்த பாவி (BAVI) சூறாவளி கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் நகரும் இந்த புயல் தற்போது தாய்வானின் வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் தாய்பே உள்ளிட்ட […]
மனிதகுலத்தின் பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அனைத்து நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வலியுறுத்தியுள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அரசியல் சிந்தனைகள் ஆட்சிமுறை தேசிய முன்னேற்றக் கொள்கைகள் மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பான கருத்துகளை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழா பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது. இதனுடன் இணைந்து “இலங்கையும் சீனாவும் நவீனமயமாக்கல் பாதையில் கைகோர்த்து […]
சீனாவின் வடமேற்கு பகுதியான சின்ஜியாங் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இந்த கோடைக்காலத்தில் தீவிர வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அசாதாரணமாக அதிகரித்த வெப்பநிலை, கனமழை மற்றும் பனிப்பாறைகள் வேகமாக உருகுவது ஆகிய காரணங்களால் இந்த நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் மிகப்பெரிய பாலைவனமான டக்லமகான் பாலைவனத்தில் இந்த ஆண்டின் முதல் வெள்ளம் ஜூன் மாத தொடக்கத்திலேயே பதிவாகியுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே காணப்படும் வெள்ள நிலைமை இந்த […]
சீன அதிபர் Xi Jinping, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவுக்கு மேற்கொண்டுள்ள அரிய இருநாள் அரசுமுறைப் பயணம் சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பியோங்க்யாங்கில் வடகொரிய தலைவர் Kim Jong Un அவரை பிரம்மாண்ட வரவேற்புடன் வரவேற்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பயணம் சமீபகாலமாக ரஷ்யாவுடன் வடகொரியா நெருக்கமான உறவை வளர்த்துவரும் சூழலில் பியோங்க்யாங்கின் மீது சீனாவின் […]
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் 82 பேரை பலிகொண்ட நிலக்கரி சுரங்க வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லியுஷென்யூ சுரங்கத்தில் இடம்பெற்ற இந்த பேரழிவுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் அதிகாரப்பூர்வ கண்காணிப்பில் இடம்பெறாத மறைவு சுரங்கப்பாதைகள் போலியான சுவர் கதவுகள் இரட்டை வரைபடங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆய்வாளர்கள் வரும்போது மறைவு சுரங்கங்களை மறைக்க போலி கல் சுவர் கதவுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் உண்மையான […]
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களின் இயக்கம் மெதுவாக மீண்டும் தொடங்கியுள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. கத்தாரில் இருந்து LNG ஏற்றிச் சென்ற “Fuwairit” என்ற கப்பல் தற்போது பாகிஸ்தானை நோக்கிப் பயணிக்கிறது அதேவேளை ஈராக் பஸ்ரா கச்சா எண்ணெய் ஏற்றிய “Eagle Verona” என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பல் சீனாவை நோக்கி வளைகுடாவை விட்டு புறப்பட்டுள்ளதாக […]
சீனாவில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மீண்டும் தங்களது நெருக்கமான உறவை வெளிப்படுத்தினர். “எனது அன்பான நண்பரே” என புதின் ஷியை வரவேற்றதோடு “எனது பழைய நண்பரே” என ஷி பதிலளித்தது உலக அரசியல் கவனத்தை ஈர்த்தது. பல ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ள இந்த இரு தலைவர்களும் ரஷ்யா-சீனா உறவு “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது” என வலியுறுத்தினர். சந்திப்பின் போது அமெரிக்காவின் வெளிநாட்டு […]