Tag: economic news
பணவீக்கம் உயர்வு இலங்கையின் ஆண்டு அடிப்படையிலான மொத்த பணவீக்க விகிதம் (CCPI) ஜூன் மாதத்தில் பதிவான 6.8 சதவீதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி உணவுப் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 3.6 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அதேவேளை […]
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீடித்தால், வாகன சந்தையில் புதிய சிக்கல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாட்டின் வாகனத் தேவை ஓரளவிற்கு பூர்த்தியாகியுள்ளதால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதியிலிருந்து அரசுக்கு கிடைக்கும் வரி வருமானம் குறையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பிறகு வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பதா அல்லது மாற்றியமைப்பதா என்பது குறித்து அரசாங்கம் எடுக்கும் […]
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும்போதும் இலங்கை தங்கம் விலை இன்று சற்று குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டிருப்போருக்கு ஆச்சரியமான செய்தியாக அமைந்துள்ளது.உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு முதலீட்டு தேவை காரணமாக சர்வதேச தங்க விலை உயர்ந்துள்ளது. ஆனால் உள்ளூர் சந்தையில் நாணய மாற்று விகிதம், இறக்குமதி செலவுகள் மற்றும் சந்தை தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் சில்லறை விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.நகை விற்பனையாளர்களின் தகவலின்படி இந்த […]
EPF ETF ஆய்வு மேற்கொள்வதற்காக அரசாங்கம் விசேட ஆய்வுக்குழுவொன்றை நியமித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) தொடர்பான தற்போதைய நடைமுறைகள், முதலீட்டு முகாமைத்துவம் மற்றும் உறுப்பினர்களுக்கான நன்மைகள் குறித்து விரிவாக ஆராய்வதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும். அரசாங்கத்தின் கூற்றுப்படி இந்த ஆய்வு மூலம் நிதிகளின் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் எதிர்கால மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து பரிந்துரைகள் பெறப்படவுள்ளன. இதன் மூலம் உறுப்பினர்களின் சேமிப்புகளை மேலும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் நிர்வகிக்க […]
உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு அபாயம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்புகள் காரணமாக இந்த எண்ணெய் விலை உயர்வு அபாயம் மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராபிடன் எனர்ஜி நிறுவனத் தலைவர் பாப் மெக்நாலி கூறுகையில் உலக எண்ணெய் சந்தையில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் இதனால் விலை அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். […]
வாகன இறக்குமதி செலவு நாளாந்த அடிப்படையில் கணிசமாக குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இன்று (12) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் 2025 ஆம் ஆண்டில் வழக்கமாக நாளொன்றுக்கு சராசரியாக 5.27 மில்லியன் அமெரிக்க டொலர் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டதாக தெரிவித்தார். எனினும் பொருளாதார நிலைமை குறித்த அச்சம் காரணமாக ஒரு […]
உலக பொருளாதார மந்தநிலை அபாயம் அதிகரித்து வருவதாக உலக வங்கி (World Bank) எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் எரிசக்தி விலை உயர்வு மற்றும் பணவீக்க அழுத்தங்கள் காரணமாக 2026 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி COVID-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய மிகக் குறைந்த நிலையை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டில் 2.9 சதவீதமாக இருந்த உலக பொருளாதார வளர்ச்சி 2026 ஆம் ஆண்டில் 2.5 […]
ஏற்றுமதி வருவாய் மாற்றம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி (CBSL) புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. இதன்படி பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் பெற்றுக்கொள்ளும் ஏற்றுமதி வருவாயில் பயன்படுத்தப்படாமல் மீதமிருக்கும் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மாதத்தில் பெறப்படும் ஏற்றுமதி வருவாயில் அங்கீகரிக்கப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்ட தொகையைத் […]
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்தும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் அரசாங்கம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உடனடி கட்டண உயர்வுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து துறையில் செலவுகள் அதிகரித்தாலும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய பஸ் கட்டணமே தொடரும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் நாளாந்தம் பொதுப் […]
இலங்கையின் வங்கி மற்றும் நிதி அமைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மோசடி மற்றும் நிதி இழப்புகள் பொதுமக்களின் வைப்புத்தொகை பாதுகாப்பு குறித்து கடும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. கண்டி பகுதியில் உள்ள தனியார் வங்கி கிளையில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் மற்றும் தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணம் காணாமல் போனதாக வெளியான தகவல்கள் நாட்டின் வங்கி நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்களை […]