Tag: Kilinochchi News
Sri Lanka News, வட மாகாணத்தில் தென்னம் பொருட்கள் சார்ந்த உற்பத்தி முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்னை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்து ரணதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தென்னை உற்பத்தி சார்ந்த […]
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடும் வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழ்நிலையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திருவையாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தென்னைச் செய்கைத் திட்டத்தில் தென்னை நாற்று விநியோகம் மற்றும் நடுகை நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகளையும் விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் […]
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவர் கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள வட்டார வனவளத் திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் அலுவலகத்தினர் வழங்கிய […]
அண்மைக்காலமாக நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தாயக எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்படுவது தொடர்பாக போலீஸார் தங்களது தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஒரு காணொளி (Video) தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவினர் அந்தப் பாடலைப் பாடிய கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சாவகச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து விசாரணை வரும் […]
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் பாலாவி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும் பூர்வீக நிலங்களையும் பாதிக்கும் அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் மக்கள் போராட்டமும் முன்னெடுத்துள்ளனர். ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வேரவில் […]