Tag: public health
புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்கும் தேசிய முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார ஊழியர்களை மையமாகக் கொண்ட புதிய வேலைத்திட்டமான புகையிலை ஒழிப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் மூலம் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கும் புகைப்பிடிப்பை நிறுத்த விரும்பும் நபர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதற்கும் தேவையான திறன்கள் மற்றும் அறிவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பயன்பாடு உலகளாவிய ரீதியில் தடுப்பதற்கக்கூடிய மரணங்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. […]
இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நோயாளர்களின் சிகிச்சை உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் நோய் தடுப்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என தேசிய புற்றுநோயியல் நிறுவனத்தின் ஆலோசகரும் புற்றுநோய் வைத்திய நிபுணருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மறைந்த பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவு நிகழ்வில் உரையாற்றிய அவர் புற்றுநோய் என்பது இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய அளவிலும் அதிகரித்து வரும் சுகாதார […]
செய்தியின் படி தென் அத்திலாந்திக் கடலில் பயணித்த டச்சு சொகுசு கப்பல் MV Hondius இல் ஏற்பட்ட ஹாண்டா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் ஒன்பது பிரிட்டிஷ் குடிமக்கள் முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலுக்காக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்படுகின்றனர். UK Health Security Agency (UKHSA) தெரிவித்ததாவது இவர்கள் அனைவரும் தற்போது அறிகுறிகள் இன்றி இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என கூறியுள்ளது. இதற்கு முன் அந்தக் கப்பலில் இருந்து வந்த சிலர் 45 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர் […]
காங்கோ ஜனநாயகக் குடியரசும் உகாண்டாவும் மையமாகக் கொண்டு பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. குறிப்பாக “புண்டிபூக்யோ” எனப்படும் அரிதான எபோலா வைரஸ் வகை தற்போது வேகமாகப் பரவி வருவதால் உலக நாடுகள் அதிக கவனத்தில் உள்ளன. இதுவரை 80-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் 200-க்கும் அதிகமான சந்தேக நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது நேரடி […]
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு கப்பல் பயணத்தின் போது பயணிகளுக்கிடையே ஹண்டா வைரஸ் (Hantavirus) பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வைரஸ் பொதுவாக எலி போன்ற உயிரினங்களின் மூலம் மனிதர்களுக்கு பரவுவது வழக்கம் என்றாலும் இந்தச் சம்பவத்தில் மனிதர்களுக்கிடையே பரவியிருக்கக்கூடும் என்ற சாத்தியம் ஆராயப்படுகிறது. பயணத்தின் போது சிலர் காய்ச்சல், சுவாச சிரமம் போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமை குறித்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தொடர்புடைய பயணிகள் […]
இலங்கையில் 7 மாவட்டங்களில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, கலுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களில் அதிகமான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வழங்கிய தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 4,617 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு, கம்பஹா மற்றும் கலுத்துறை மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த […]