புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்கும் தேசிய முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார ஊழியர்களை மையமாகக் கொண்ட புதிய வேலைத்திட்டமான புகையிலை ஒழிப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் மூலம் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கும் புகைப்பிடிப்பை நிறுத்த விரும்பும் நபர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதற்கும் தேவையான திறன்கள் மற்றும் அறிவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பயன்பாடு உலகளாவிய ரீதியில் தடுப்பதற்கக்கூடிய மரணங்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனால் இதய நோய்கள், புற்றுநோய், சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் சுகாதாரத் துறையினர் புகையிலை ஒழிப்பு நடவடிக்கைகளில் முன்னணி பங்காற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெற வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் புகைப்பிடிப்பை கைவிட ஊக்குவித்தல் ஆகியவற்றிலும் சுகாதார ஊழியர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார நிலையங்கள் ஊடாக புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் பொதுமக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் இந்த திட்டம் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாட்டில் புகையிலைப் பயன்பாட்டை குறைத்து புகையிலை சார்ந்த நோய்களின் சுமையை தணிப்பதற்கான நீண்டகால இலக்கின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





Leave a Reply