Tag: Sri Lanka Education
2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள நிலையில் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் தங்களுக்குரிய பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சை செப்டம்பர் 05ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இதில் 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் […]
ShakthiSAT Mission, இலங்கையின் இளம் தலைமுறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் இலங்கை மாணவர் ஒருவர் சர்வதேச ShakthiSAT விண்வெளி திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான நடைமுறைப் பயிற்சிகளில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். இந்தத் திட்டம் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்துவதோடு செயற்கைக்கோள் வடிவமைப்பு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதுமை சார்ந்த தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவத்தை […]
Innovation Partnership, இலங்கையில் புதுமை, தொழில்முனைவு மற்றும் ஆய்வு முடிவுகளை வர்த்தக ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு (SLIC) ஆகியவற்றுக்கு இடையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கும் தொழில் உலகிற்கும் கொண்டு செல்லும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள Innovation & Startup Incubator […]
உயர்தரப் பரீட்சை , 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் தொடர்பில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 10 முதல் செப்டெம்பர் 5 வரை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இன்று […]
பல்கலைக்கழக பகிடிவதை 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரச பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்களால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 106 பேர் காயமடைந்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இதனைத் தெரிவித்த அவர் இதே காலப்பகுதியில் பகிடிவதை தொடர்பாக 141 முறைப்பாடுகளும் கடுமையான காயங்கள் தொடர்பாக 93 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக கூறினார். பகிடிவதை சம்பவங்களை விசாரிக்க பல்கலைக்கழக மட்டத்தில் 28 […]
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதிக்குள் இணையவழி மூலம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை தேசிய அடையாள அட்டையை […]
விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கியமான தீர்மானமாக எதிர்காலத்தில் மருத்துவம், பொறியியல் விவசாயம் உள்ளிட்ட தங்களது திறமைகளுக்கு ஏற்ற எந்தவொரு பல்கலைக்கழகப் படிப்பையும் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், இதற்கு முன்பு இந்த மாணவர்கள் கலை, மேலாண்மை, பௌதிக அறிவியல் […]
Sri Lanka News,சிறப்பு தேவைகள் கொண்ட மாணவர்கள் உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (11) கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்ற Sarasavi Diriyo Abhiman 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார். பல்கலைக்கழக கல்வியைத் தொடரும் சிறப்பு தேவைகள் கொண்ட மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு […]
பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள சில நிபந்தனைகள் அரசாங்கப் பரீட்சைகளின் இரகசியத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக குறித்த சுற்றறிக்கையை உடனடியாக இடைநிறுத்தி தேவையான திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் சி.பி. இலங்கசிங்க தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் சுற்றறிக்கையின் 7.5ஆம் இலக்கத்தின் கீழ் பல்கலைக்கழக […]
உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்க கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போதைய குறுகிய காலப்பகுதிக்குள் உயர்தரப் பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்து பரீட்சைக்குத் தயாராவது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். வழங்கப்பட்டுள்ள […]