Tag: War Crimes
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் உண்மையைக் கண்டறிதல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளதற்கான மிகத் தெளிவான அடையாளமாக யாழ்ப்பாணத்தின் செம்மணி–சித்துபாத்தி மனிதப்புதைகுழி மாறியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது. “செம்மணி மனிதப்புதைகுழி நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் பல ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து உண்மையை அறிய காத்திருக்கும் குடும்பங்களின் சாட்சியங்கள் […]
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் சோமரத்ன ராஜபக்ச வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டிய அவர் அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அது சந்திரிகாவின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டதாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். அந்தக் கடிதத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை […]
பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாகக் கருதப்பட்டு முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதன்போது தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை சபையில் சுட்டிக்காட்டிய அவர் […]
முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஆட்சிக் காலத்தில் செயல்பட்டதாகக் கூறப்படும் இரகசிய இரசாயன ஆயுத திட்டத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது சரின் நரம்பு வாயு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூலப்பொருட்கள் ஏவுகணைகள் விமானக் குண்டுகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அசாத் ஆட்சியின் இரசாயன ஆயுத திட்டத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உயர்மட்ட இராணுவ அரசியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் உட்பட 18 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் […]
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (Indian Peace Keeping Force) நிலைகொண்டிருந்த 1980களின் இறுதிப்பகுதியில் கொல்லப்பட்ட அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய புதிய டிஜிட்டல் தரவுத்தளமொன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணக்காப்பகத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (International Truth and Justice Project) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளது. 1987 ஒக்டோபர் முதல் 1990 மார்ச் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற மனித […]