Tag: crime news
Port City Murder, கொழும்பு போர்ட் சிட்டியில் கடத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில் எஹெலியகொட பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை கணினி தொடர்பான நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நிஷாந்த டி சொய்சா நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார். கடந்த சில நாட்களாக கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் தொடர்பில் […]
Sri Lanka Shooting Incidents, இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 21 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 14 பேர் உயிரிழந்தும் 12 பேர் காயமடைந்தும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் மூன்று மணி நேர இடைவெளிக்குள் தெமட்டகொடை மற்றும் வத்தளை பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன. வத்தளையில் நடைபெற்ற சிறுவர் பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் விசாரணையில் […]
ஆரச்சிக்கட்டுவ பகுதியில் தனது சகோதரனைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் கத்தியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (22) பிற்பகல் ஆரச்சிக்கட்டுவ காவல்நிலையத்திற்கு வந்த குறித்த நபர் தனது சகோதரனைக் கொலை செய்துவிட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவர் வசித்து வந்த ராஜகதலுவ பகுதியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டபோது சடலமொன்று மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் துலன் ஹசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் நீண்டகாலமாக உடல்நல மற்றும் மனநல பாதிப்புகளால் அவதிப்பட்டு […]
Sri Lanka News, சீன நாட்டவருக்கு சொந்தமான ரூ.20 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் 21 வயதுடைய மகனை கொழும்பு கொல்லுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் தொடர்பான விசாரணையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. பொலிஸாரின் தகவலின்படி கடந்த ஜூலை 13 அன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபராக அடையாளம் […]
சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் சமூக பிறழ்வான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் விடுதி ஒன்றை காவல்துறையினர் சுற்றிவளைத்து ஐந்து பேரை கைது செய்துள்ளனர். நேற்று (19.07.2026) மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை காவல்துறை நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. சோதனையின்போது குறித்த விடுதியை நிர்வகித்து வந்த 40 வயதுடைய ஆண் முகாமையாளர் மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு தங்கியிருந்த 22 முதல் 30 வயதுக்குட்பட்ட […]
மட்டக்களப்பு மாவட்டத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை வாங்குவது போல் நடித்து அவற்றை சோதனை ஓட்டம் செய்வதாகக் கூறி திருடிச் சென்ற நூதன மோசடியில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் படி சந்தேகநபர் முதலில் காத்தான்குடியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்குச் சென்று வாகனத்தை வாங்குவதாகக் கூறி சோதனை […]
குருநாகல் மாவட்டத்தின் வெலகெதர பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவம் தொடர்பான வழக்கில் ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்தனகல்லா வெலகெதரவைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று (17) இந்த தீர்ப்பை வழங்கினார். 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி வெலகெதர […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் மரணங்கள் தொடர்பாக சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல்களும் உயிரிழப்புகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றாலும் காவலில் இருந்த கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் மரணங்கள் குறித்தும் சம அளவில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலைகளில் […]
வவுனியா மேல் நீதிமன்றம் தனது சொந்த 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் 2022ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்தில் […]
Sri Lanka News, ஹோமாகம பிடிப்பன பகுதியில் உள்ள கால்வாயில் இன்று (16) அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சடலம் கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள காணி ஒன்றில் இருந்து உயிரிழந்தவருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் ஒரு ஜோடி காலணியும் 20 ரூபாய் நாணயத்தாளும் மீட்கப்பட்டுள்ளன. அந்த இடத்திலேயே கொலை இடம்பெற்றிருக்கலாம் […]