Tag: Hormuz Strait
Saudi oil attack, ஜேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோக மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். ஹூதி இராணுவ பேச்சாளர் யஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு சவுதியை செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான யன்பு துறைமுகத்துடன் இணைக்கும் பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை யேமன் வான்வெளியில் சவுதி அரேபியா மேற்கொண்டதாக கூறப்படும் […]
தென்மேற்கு ஈரானின் அஹ்வாஸ் நகருக்கு மேலாக பறந்த அமெரிக்காவின் அதிநவீன MQ-9 ஆளில்லா விமானத்தை இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் IRIB ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக எந்த உத்தியோகபூர்வ பதிலும் வெளியிடவில்லை. மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் முன்னெடுத்த மத்தியஸ்த கட்டமைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும் ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் […]
அமெரிக்கா தனது “ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை” நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்றும் அதுமட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் நலன்களுக்கு முக்கியமான பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி விநியோகப் பாதைகளும் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கடுமையாக எச்சரித்துள்ளது. அமெரிக்கா மீண்டும் விதித்துள்ள முற்றுகை மற்றும் அண்மையில் ஈரான் மீது முன்னெடுத்த வான்வழி கடற்படை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு கடற்பாதையில் ஒமான் கடல் எல்லைக்குள் பயணித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான ‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாஹியா’ (Al Bahiyah) என்ற இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச […]
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே அடிப்படை நிபந்தனைகள் ஈரானின் இறையாண்மை மற்றும் உரிமைகள் முழுமையாக மதிக்கப்படுவதுடன் ஈரான்–அமெரிக்கா இடையிலான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும் என ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய மூலோபாய கடற்பாதையில் ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பதில் எந்தவித பின்னடைவுமில்லை என்றும் நாட்டின் பாதுகாப்பு […]
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் விரிவுபடுத்தியதையடுத்து ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலக எரிசக்தி போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கமாக பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2.34 அமெரிக்க டொலர் அதிகரித்து 78.35 அமெரிக்க டொலராகவும் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் (WTI) […]
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது எந்தவிதத் தாக்குதலும் நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவல்களில் தெஹ்ரானின் அதிகார மையங்களுக்குள் நிலவும் உள்நாட்டு அதிகாரப் போட்டிகள் அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் நிறுத்தப் புரிந்துணர்வை எட்டுவதையும் அது நடைமுறையில் நீடிப்பதையும் சிக்கலாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர் நிறுத்தத்தை சீர்குலைக்க […]
ஈரானிய எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டிருந்த பொது உரிமத்தை அமெரிக்க திறைசேரி ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 2026 ஜூன் 21ஆம் திகதி அமல்படுத்தப்பட்டிருந்த பொது உரிமம் X ஜூலை 7 முதல் ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக புதிய பொது உரிமம் X1 முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமெரிக்கா கடந்த […]
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை இரவு குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் கணிசமான சேதமடைந்ததாகவும் எனினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஓமானின் லிமா கடற்பகுதிக்குக் கிழக்கே தெற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத […]
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கப் படைகள் ஈரானிய இலக்குகளைத் தாக்கியதை அடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. […]