September 9, 2026
Breaking News
USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம்

Tag: human rights

நாடு முழுவதும் சிறைகளில் பதற்றம் வெடிக்கும் அபாயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கொடூர வன்முறைச் சம்பவம் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் அபாயத்தை வெளிப்படுத்துவதாக கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (PRC) அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சிறைச்சாலைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசல் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை மற்றும் போதிய நிர்வாகக் கட்டுப்பாடு இல்லாமையே இவ்வாறான வன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகக் குறிப்பிட்டார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் 600 முதல் 650 […]

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைவோம்

எதேச்சாதிகார, சர்வாதிகார மற்றும் தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயக நாட்டை உருவாக்க அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். “இலங்கை சிவில் சமூகங்களின் பயணப் பாதை” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற சிவில் சமூக அமைப்புகளின் விசேட ஒன்றுகூடலில் உரையாற்றிய அவர் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள் சீர்குலைக்கப்படும் சூழலில் சிவில் சமூக அமைப்புகளும் சுதந்திர ஊடகங்களும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் […]

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதல் தொடர்பில் அரசாங்கம் உண்மையை மறைக்காமல் உடனடியாக உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இந்தச் சம்பவத்தில் சுமார் 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கமோ சிறைச்சாலைகள் திணைக்களமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கமொன்றையும் வழங்கவில்லை என […]

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திப்பு

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை மையமாகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (03) சென்னை நகரில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து ஈழத்தமிழர் மக்களின் அரசியல் மனித உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது ஈழத்தமிழர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல மனுவொன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் […]

சித்திரவதை தடுப்பில் இலங்கைக்கு பாராட்டு

சித்திரவதைகளைத் தடுப்பதில் இலங்கை வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளையும் தடுப்புக்காவல் நிலையங்களுக்கு எவ்வித தடையுமின்றி களவிஜயங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியதையும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழு (SPT) பாராட்டியுள்ளதாக வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தலைமையிலான பிரதிநிதிகள் குழு கடந்த 24 ஆம் திகதி வரை நாட்டில் […]

ஜெர்மனியில் சோமாலிய அகதி, நாடுகடத்த நீதிமன்றம் தற்காலிக தடை

ஜெர்மன் நீதிமன்றம், ஜெர்மனியில் அகதி அந்தஸ்து நீக்கப்பட்டிருந்த சோமாலிய சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் ஒருவரை உடனடியாக நாடுகடத்த முடியாது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த பெண் அகதி அந்தஸ்தைப் பெற்றிருந்த போதிலும் பின்னர் சோமாலியாவுக்கு பயணம் செய்தது உறுதியானதால் அவரது அகதி பாதுகாப்பு அந்தஸ்து அதிகாரிகளால் நீக்கப்பட்டது. இருப்பினும், அவரை சோமாலியாவுக்கு திருப்பி அனுப்பினால் அங்கு உயிர் மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்து நிலவக்கூடும் என ஜெர்மன் நீதிமன்றம் மதிப்பிட்டது. அதனால் அகதி அந்தஸ்து நீக்கப்பட்டிருந்தாலும் […]

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது மாற்றத்தை நிறுத்துங்கள் இலங்கைக்கு LAWASIA அவசர கோரிக்கை

இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆசியா-பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA கடும் கவலை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. LAWASIA வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாற்றமும் பரந்த அளவிலான ஆலோசனை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக […]

திருத்தந்தை லியோவிடம் தாயார் அவசர தலையீடு கோரி கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே தொடர்பாக நீதி மனித கௌரவம் மற்றும் கருணை அடிப்படையிலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு அவரது தாயார் கிளோடியா சலே வத்திகானில் உள்ள திருத்தந்தை லியோவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதம் கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் எந்த நீதிமன்றத்தாலும் குற்றவாளியாக அறிவிக்கப்படாத நிலையிலும் பொதுமக்கள் மத்தியில் குற்றவாளியாக சித்தரிக்கப்படுவதாக அவர் […]

GSP+ சலுகை ஆபத்தில் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை

சர்வதேச சட்டங்களுக்கு இணங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தத் தவறினால் இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச்சலுகை ஆபத்துக்குள்ளாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொழும்பு அலுவலக அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் பிற நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என கோரியதாக […]

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

சர்வதேச சட்டங்களுக்கு இணங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை விரைவாக கொண்டு வரத் தவறினால் இலங்கையின் GSP+ வரிச்சலுகை ஆபத்துக்குள்ளாகும் என முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் அண்மையில் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றதாகக் கூறினார். மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் பிற நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் […]