Tag: Nirosh_Santhuru Channel
பிரான்ஸின் துலூஸ் நகரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சார மோட்டார் சைக்கிள்களில் வந்த பலர் இளைஞர்கள் குழுவொன்றை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துலூஸின் La Reynerie பகுதியில் உள்ள Avenue Winston-Churchill வீதியில் இன்று சனிக்கிழமை (15) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சார மோட்டார் சைக்கிள்களில் வந்த பலர் அங்கிருந்த இளைஞர்கள் குழுவை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து […]
இங்கிலாந்தில் பாலியல் சேவைகளை நாடிய ஆண்களை குறிவைத்து அவர்களுக்கு ரகசியமாக மயக்கத்தை ஏற்படுத்தும் போதைப்பொருளை கொடுத்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் மற்றும் பெண் தொடர்பான வழக்கில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 31 வயதான Adina Mihai மற்றும் 30 வயதான Madalin Dumitru ஆகியோர் 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரையான காலப்பகுதியில் பாலியல் சேவைகளை நாடிய ஆண்களை திட்டமிட்டு குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் பாலியல் தொழிலாளி போன்று […]
பிரான்சில் பள்ளித் தொடக்க உதவித்தொகையான Allocation de rentrée scolaire 2026 பெருநிலப் பிரான்சில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குடும்ப நல உதவி அமைப்பான Caf தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான இந்த உதவித்தொகை 0.8 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வயதைப் பொறுத்து வழங்கப்படும் தொகையும் மாறுபடும். 6 முதல் 10 வயது வரையான குழந்தைக்கு 426 யூரோவும், 11 முதல் 14 வயது வரையான குழந்தைக்கு 450 யூரோவும், 15 முதல் […]
பிரான்சில் பழுதான மின்னணு சாதனங்களுக்கு புதிய விதிகள் சாதனங்களை மாற்றுவதற்குப் பதிலாக பழுதுபார்த்து தொடர்ந்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களைப் பழுதுபார்ப்பதை ஊக்குவிக்கும் புதிய சட்ட விதிகள் ஜூலை 31 முதல் அமுலில் உள்ளதாக பிரான்ஸ் அரசின் Service Public தெரிவித்துள்ளது. புதிய விதிகளின்படி ஒரு பொருளின் இரண்டு ஆண்டு சட்டபூர்வ உத்தரவாதக் காலத்திற்குள் அதனை மாற்றுவதற்குப் பதிலாக பழுதுபார்க்க நுகர்வோர் தெரிவு செய்தால், அந்தப் பொருளின் உத்தரவாதம் மேலும் […]
இஷாரா செவ்வந்தி, கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இஷாரா இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது வழக்கு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அவரை ஆகஸ்ட் 21ஆம் […]
புடவைக்கட்டில் பஸ்ஸுடன் டிப்பர் மோதி விபத்து தொடர்பில் வீதிப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கவனம் எழுந்துள்ளது. திருகோணமலை சலப்பயாறு பிரதேசத்திலிருந்து புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலைக்கு கரிமண் ஏற்றிய நிலையில் தினமும் அதிக அளவிலான டிப்பர் வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணித்து வருவதாகவும் இந்த நிலையில் இன்று கரிமண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று புடவைக்கட்டு பகுதியில் பஸ்ஸின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வீதியில் அதிக எண்ணிக்கையிலான டிப்பர் வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணித்து வருவதால் […]
கனடா வேலை அனுமதி தொடர்பாக அண்மையில் அறிவிக்கப்பட்ட முக்கிய கட்டுப்பாடு ஒன்றை கனடாவின் குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) திரும்பப் பெற்றுள்ளது. குறிப்பாக பரஸ்பர வேலைவாய்ப்பு அடிப்படையிலான C20 வேலை அனுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய நிபந்தனை தற்போது நீக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை 29 அன்று வெளியிடப்பட்ட IRCC வழிகாட்டுதலில் C20 பிரிவின் கீழ் வேலை அனுமதி பெற விரும்பும் வெளிநாட்டவர் கனடாவுக்கு வெளியே உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஏற்கனவே பணிபுரிபவராக இருக்க வேண்டும் என்ற […]
கனடாவில் தற்காலிக விசா விண்ணப்பிப்பவர்கள் காத்திருக்க வேண்டிய காலம் பல பிரிவுகளில் அதிகரித்துள்ளதாக கனடா குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் IRCC சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வேலை அனுமதி, கல்வி அனுமதி, பார்வையாளர் விசா மற்றும் பெற்றோர் தாத்தா பாட்டிகளுக்கான சிறப்பு விசா விண்ணப்பங்களின் காத்திருப்பு காலங்களில் நாடுகளுக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்து சமர்ப்பிக்கப்படும் வேலை அனுமதி விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலம் 11 வாரங்களில் இருந்து 25 வாரங்களாக அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு 9 […]
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபைக் கூட்டத்தின்போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தல் தனிநபர்களை மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்கக் கட்டமைப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் […]
ரெட் நோட்டீஸ் சந்தேக நபர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரதான சந்தேக நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக […]