உஸ்பெகிஸ்தானின் தஷ்கெந்தில் நடைபெற்ற மத்திய மற்றும் தென் ஆசிய ரக்பி செவன்ஸ் (CASA 7s 2026) தொடரில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இரு அணிகளும் தொடர் முழுவதும் அதிரடியான திறமையை வெளிப்படுத்தி எதிரணிகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கை ரக்பியின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளன.
குறிப்பாக பெண்கள் அணி தொடர் முழுவதும் தோல்வியறியா ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வெற்றி இலங்கை ரக்பி வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை அளிப்பதுடன் எதிர்கால ஆசிய மற்றும் உலகளாவிய போட்டிகளுக்கான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.





Leave a Reply