லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக 45 வயதான ஈஸ்ஸா சுலைமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் 29 ஏப்ரல் 2026 அன்று நடைபெற்றதாகவும் யூத சமூகத்தைச் சேர்ந்த இரு ஆண்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் 34 வயதான ஒருவர் மார்பு பகுதியில் கடுமையாக காயமடைந்ததுடன், 76 வயதான மற்றொருவர் கழுத்தில் காயமடைந்தார் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலைமை ஸ்திரமாக உள்ளது.
இந்த தாக்குதல் தீவிரவாத சம்பவமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் முன்பு அரசின் “Prevent” எதிர் தீவிரவாத திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்றும் ஆனால் அந்த வழக்கு 2020ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் யூத சமூகத்தை குறிவைத்து நடந்ததாக சந்தேகிக்கப்படுவதால் இங்கிலாந்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை “severe” என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் யூத சமூகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சமீப காலமாக லண்டனில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு தாக்குதல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.





Leave a Reply