ஆஸ்திரேலியாவின் நார்தர்ன் டெரிட்டரியில் உள்ள அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் காணாமல் போன 5 வயது அபோரிஜினல் சிறுமி “குமாஞ்ஜயி லிட்டில் பேபி” மரணத்திற்கு தொடர்பாக 47 வயதான ஜெஃபர்சன் லூயிஸ் மீது போலீசார் கொலை குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சிறுமி ஏப்ரல் 25ஆம் தேதி தனது குடியிருப்பு முகாமில் இருந்து காணாமல் போனதையடுத்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடத்திய விரிவான தேடுதலின் பின் ஐந்து நாட்களுக்கு பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சந்தேக நபரான லூயிஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதும் அவரைச் சுற்றி பெரும் கோபம் ஏற்பட்டதால், நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையாக மாறியது. போலீசாரும் அவசர சேவைகளும் தாக்கப்பட்டதுடன் சொத்து சேதமும் ஏற்பட்டது நிலைமை கட்டுப்படுத்த கண்ணீர் புகை பயன்படுத்தப்பட்டது.
லூயிஸ் கைது செய்யப்படும் முன் பொதுமக்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் பாதுகாப்புக்காக டார்வினுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூகத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







Leave a Reply