2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ள கேப் வாகனத்தை தமக்கு வழங்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத் வித்தானா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தமக்கு கேப் ஒன்றை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று கோரியுள்ளார். தாம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதால், மொத்தமாக 1,775 வாகனங்களுக்குப் பதில் 1,774 வாகனங்கள் மட்டுமே நாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.

தாம் தெளிவாக மறுத்துள்ள நிலையிலும் 1,775 வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது, நாட்டின் வரித்தாரர்கள் மீது கடுமையான அநீதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது இந்த கோரிக்கையைப் பற்றி நிதி அமைச்சகம் எவ்வாறு தீர்மானிக்கிறது என்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading